Monday 3 August 2020

ஆகா! என்ன கண்டுப்பிடிப்பு!

பெர்காசா கோமாளிகள் எப்படியெல்லாம் கோமாளித்தனமாகப் பேசுவார்கள் என்பது நமக்குத் தெரியும்!

இப்போது அவர்கள் கோமாளித்தனமாக ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத் தலைவராக  முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன்  நியமிக்கப்பட்டால் அவர்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்!

ஓர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு அவர்களுக்குத் துணிச்சல் வந்திருக்கிறது! அப்படியென்றால் அரசாங்கத்திற்கு யார் வேண்டுமானாலும் எச்சரிக்கை விடுக்கலாமோ!

இன்னொரு பக்கம் பார்த்தால் முதலில் அம்பிகா இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ளுவாரா என்பது தெரியவில்லை! அவர் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்.   அவரைப் பொறுத்தவரை இது ஒரு கௌரவமற்ற பதவி!  இது போன்ற பதவிகளுக்கு எத்தனையோ பேர் காத்துக் கிடக்கிறார்கள்!  அவர்களில் ஒருவர் "நாங்கள் எச்சரிக்கிறோம்!"   என்று சொல்லுகின்றவராகக் கூட இருக்கலாம்!

பொதுவாக ஓர் இந்தியர் அந்தப் பதவிக்கு வரக் கூடாது என்பது தான் அவர்களது நோக்கம்.  அதை அவர் வெளிப்படையாகச் சொல்லாமல் அம்பிகாவைப் பற்றி  வேறு ஒரு காரணத்தைச் சொல்லுகிறார்.  அவர் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவராம்!  அதனால் இவர்கள் எதிர்ப்பார்களாம்!

அப்படியென்றால் வேறு ஒரு இந்தியரை இவரே சிபாரிசு செய்யலாமே! மிக மிகத் தூயவர்களெல்லாம் பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவில் இருக்கிறார்களே!  ஒருவர் சமீப காலத்தில் மேல்சபை உறுப்பினர் ஆனாரே!

இது போன்ற பதவிகள் இந்தியர்களுக்குக் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இது ஊரறிந்த ரகசியம்.  ஒரே காரணம் தான். இந்தியர்கள் இது போன்ற பதவிகளுக்குத் தகுதியானவர்கள் அல்ல என்பது பெர்காசாவின் நிலைப்பாடு! ஆமாம், இலஞ்சம் வாங்கத் தெரியாதவனுக்கு ஏன் பதவிகள் கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களைப் போன்ற எச்சரிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்!

எது எப்படியோ நமக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்.  உயர் பதவிகள் வகிக்க இந்தியர்கள் தகுதியற்றவர்கள்.  யார் இலஞ்சம் வாங்குகிறானோ அவன் தான் எந்தப் பதவிக்கும் தகுதியுள்ளவன்.

இன்றைய உலக மதிப்பீடு அப்படித்தான் போகிறது!

இன்று பல பதவிகள் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படாதற்குக் காரணமே இலஞ்சம் தான்!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீதி, நியாயம் மட்டுமே நிலைக்கும்!

No comments:

Post a Comment