Sunday 23 August 2020

எவ்வளவு அபராதம் விதிக்கலாம்?

 தோட்டத் தொழில் மூலப்பொருள் அமைச்சர் கைருடீன் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது!

ஒரே காரணம் அவர் அமைச்சர் என்பதால் அந்தப் பிரச்சனையை  மூடி மறைக்க நினைத்தது அரசாங்கம்! அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதுதான் அரசாங்கத்திற்குப் புரிகிறது.

மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த பிரச்சனையை இப்படி மூடி மறைப்பதால் யாருக்கு என்ன இலாபம்?

முதலாவது அமைச்சர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.  துருக்கி நாட்டுக்குச் சென்று திரும்பியவர் அவர் மட்டும் அல்ல.  அவரது குழுவினரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. 

இன்று நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் கிளர்ந்து எழுகின்றது என்றால் இவரும் இவரின் குழுவினரும் காரணமாக இருக்கலாம்! இவர் அமைச்சர் என்பதால் கொரோனா தொற்று தொற்றாது என்று யாராலும் உறுதி செய்ய முடியாது!

ஆனால்  உண்மை நிலை என்ன?  இன்றைய அரசாங்கம் நிலைத்து நிற்பதற்கு பாஸ் கட்சியின் ஆதரவு தேவை.  கைருடின் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொரு பக்கம் அமைச்சர் கைருடினை ஏன்? பாஸ் கட்சியினரை அம்னோ விரும்பவில்லை! அதனால் கைருடின் பதவி விலக வேண்டும் என்று அம்னோ விரும்புகிறது!  அதனால் தான் போலிஸ் புகார்கள் இணையத்தளத்தில் விமர்சனங்கள் என்று இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!

இதனைக் கூட அரசியலாக்கி விட்டனர்!  இது சரியா, தவறா  என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை!

அமைச்சருக்கு 1000 வெள்ளி அபராதம் என்றனர்.  "நான் ஐந்து மாத சம்பளத்தைத் தருகிறேன் !" என்கிறார் அவர்!

ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.  சிவகங்கையிலிருந்து கொரோனா தொற்று நோயை இறக்குமதி செய்த உணவக உரிமையாளருக்கு அந்த மாநில நுகர்வோர் சங்கம்  பதினைந்து இலட்சம் வெள்ளி அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.  அதனையே அளவுகோளாக வைத்து நமது அமைச்சருக்கும் அதனையே அபராதமாக விதிக்க வேண்டும் என்பதே அனது அபிப்பிராயம். அத்துடன் சிறைத் தணடனையையும் அவர் அனுபவிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்குச் சிறைத் தண்டனை என்பது ஒரு பொருட்டல்ல! சிறையில் இருக்கும் போதே அவர்கள் வெளி நாடுகளுக்கெல்லாம் உல்லாசப் பயணம் மேற்கொள்வார்கள்!  அது அரசியல்வாதிகளின் அரசியல் உரிமை!

ஆனால் அவர் அமைச்சராயிற்றே!  நாம் சொல்லுவது எதுவும் நடக்காது! அதுவும் எந்த நேரத்திலும் கவிழலாம் என்னும் நிலையில் இருக்கும் அரசாங்கத்தை தூக்கி நிறுத்தும்  தூணாக இருக்கிறார் அமைச்சர்! பொது மக்கள் சொல்லுவது எதுவும் எடுபடாது!

எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? சும்மா பார்த்து, சிரித்துவிட்டுப் போக வேண்டியது தான்!

No comments:

Post a Comment