Sunday 30 August 2020

இன்னொரு ஹீரோ!

 நம்மிடம் உள்ள ஒரு கெட்டப் பழக்கத்தை இன்னும் நம்மால் கைவிட முடியவில்லை!

அது என்ன?  அடிக்கடி ஒரு சிலரை ஹீரோ ஆக்குவது! இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் தொடர்கிறது!

இப்போது நமது புதிய ஹீரோ யார். பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரும், விளையாட்டுத் துறை துணை அமைச்சருமான வான் அமாட் பைஸாவை  நாம்பெரிய ஹீரோவாகக் காட்டிக்கொண்டிருக்கிறோம்! இப்போது அவர் தனது சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டு "நானும் ஹீரோ தான்!" என்று  சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்!

பத்திரிக்கைகளின் நமது எதிர்ப்பைத் தெரிவிப்பதில் தவறில்லை. காரணம் அதைத் தவிர நமக்கு வேறு வழி தெரியவில்லை.

ஆனால் அதைவிட சரியான வழிகள் நமக்குத் தேவை.  அறிக்கைகளினால் எதுவும் ஆகப் போவதில்லை.

நாம் அறிக்கைகள் வெளியிடும் போது அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுடனும் அவர்களின் கவனத்திற்குச் கொண்டு செல்ல வேண்டும். அது மட்டும் போதாது. சான்றுக்கு மலாக்காவில் கல்வி அமைச்சில் இந்திய அதிகாரி தவிர்க்கப்பட்டிருக்கிறார்.  அறிக்கைகள் விட்டோம். ஏதாவது நகர்ந்திருக்கிறதா? ஒன்றுமில்லை! 

கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் போதே  அந்த மாநிலம் பாரிசான் ஆட்சியில் உள்ள மாநிலம்.  நாம் ம.இ.கா.வின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவர்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று நமக்குத் தெரியும்! காரணம் அதையெல்லாம் அவர்கள் கேட்டால் வேள்பாரி மேலவையில் செனட்டராகி இருக்க மாட்டார்! ஆனாலும் அவர்களிடன் கொண்டு சென்றிருக்க வேண்டும். கோச டப்பாக்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக சத்தம் போடும்! அவ்வளவு தான்!

இப்போது வான் அமாட் பைஸாவை ஏன் பெரிய ஹீரோ ஆக வேண்டும்? பெர்சத்துவும் பல இன கட்சி தான்.  அதில் யார் முக்கியப் புள்ளி , அவரிடம் அந்தப் பிரச்சனையக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் பிரதமரிமும் பேச்சு வார்த்தை நடத்தலாம். அல்லது அமைச்சரவையில் இருக்கும் டத்தோ ஸ்ரீ சரவணனிடமும்  பிரச்சனையக் கொண்டு செல்ல வேண்டும்.  எல்லாருமே அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.  மேல் தட்டிலுள்ளவர்களும் அக்கறை கொள்ள வேண்டும். 

பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பிரச்சனையை அணுக வேண்டும்.  இனி மேல் இவரைப் போன்றவர்கள் வாய் திறக்காமல் இருக்க செய்ய வேண்டும்.

ஒரு பிரச்சனை வரும் போது அறிக்கைகளை விட்டு ஒருவரை ஹீரோ ஆக்குவது இனி மேலும் தொடர வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்!

இனி மேல் நமக்கு ஹீரோ வேண்டாம்!

 

No comments:

Post a Comment