Saturday 22 August 2020

தேவையா? தேவையே இல்லை!

பாலர் பள்ளி ஆசிரியை, இந்திரா காந்தி ஆவேசப்படுவதில் அர்த்தமுண்டு!

அவருக்குத் தேவை ,மதம் மாறிய அவரது முன்னாள் கணவர் முகமது ரிட்சுவான் அப்துல்லாவால் கடத்திக் கொண்டு போகப்பட்ட  தனது மகள் பிரசன்னா டிக்சா. அந்த குழந்தை மட்டும் தான் அவர் கேட்பதெல்லாம். 

ஒரு வயதாக இருக்கும் போது கடத்திக் கொண்டு போகப்பட்டவர் இப்போது பதினோரு ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தையின் நிலை தாய்க்குத் தெரியவில்லை. 

பதினோரு ஆண்டுகள் ஆகியும் தனது மகளின் நிலை என்னவென்று அறியாத ஒரு தாயின் நிலை  எப்படி இருக்கும் என்பதை யோசித்திருந்தாலே இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும்,.

ஆனால் பலர் இதனை அறிந்திருக்கவில்லை. குறிப்பாக காவல்துறையினர்!  தாய் மகள் பிரச்சனைகளை இவர்கள் அறியாதவர்கள். காக்கி உடைகளுக்குப் பின்னால் கனிவு இருக்க நியாயமிலை!

இப்போது கிடைத்த செய்திகளின் படி இந்திரா காந்தி தனது முன்னாள் கணவருடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்பது தெரிகிறது. ஆனால் இந்திரா காந்தி அதனை விரும்பவில்லை,  விரும்பமாட்டார் என்பது நமக்குத் தெரியும். 

மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு, ,தனது குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு, பதினோரு ஆண்டுகள் அலைக்கழித்த ஒரு நபரை பார்க்க வேண்டும் என்கிற அவசியம் அவருக்கு இல்லை! சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கூட அவரைப் பார்க்க வாய்ப்பில்லை!  அதனையும் அவர் விரும்ப மாட்டார்! தனது முந்தைய மதத்திற்கே திரும்புகிறேன் என்றால் கூட அவரை வரவேற்க யாருமில்லை!

இது ஒரு சாதாரண விஷயமல்ல.ஒரு"முன்னாள்" இந்த அளவுக்கு விஷத்தைக் கக்குவான் என்று எந்த மனைவியும் எதிர்பார்த்திருக்க மாட்டாள்!. அதற்கான பலனை அவர் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!

இங்குத் தேவை பேசுவதற்கான ஏற்பாடுகள் அல்ல! குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அது மட்டுமே! 

பேசுவதற்கான ஏற்பாடுகள் தேவையா?  தேவையே இல்லை!

No comments:

Post a Comment