Thursday 6 August 2020

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து.......!

 பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து......! என்று ஆரம்பிக்கும் கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு!

இந்தப் பாடலின் முதல் வரி மட்டும்  சீன நாட்டுக்கோ, சீனர்களுக்கோ மிகவும் பொருந்தும்! அவர்களோடு வாழ்ந்து வரும் நமக்கு அவர்களைப் பற்றி நாம் அறியாததா!

1எம்டிபி ஊழலில் தேடப்படும் ஜோ லோ மற்றும் அவருடைய சகாக்கலும் சீனாவில் தான் இருக்கிறார்கள் என்கிறார் காவல்துறைத் தலைவர்  டான்ஸ்ரீ அப்துல் ஹமீது. அது சரியாகத்தான் இருக்கும் என்று எப்போதோ நாம் அந்த முடிவுக்கு வந்து விட்டோம்! 

ஆனால் சீனா அதனை மறுக்கிறது.  அவர்கள் மறுப்பார்கள் என்பது நமக்கும் தெரியும் நமது அரசாங்கத்திற்கும் தெரியும். 

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த மூடுதிரை வாழ்க்கை நடத்தும் கொள்ளையர்களான கோடிசுவரர்களால் சீனா அரசாங்கத்திற்கு இலாபம் உண்டு. அங்கு அவர்கள் பல பெரும் தொழில்களில் முதலீடு செய்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை! அவர்களால் சீனாவுக்கு எந்த இலாபமுமில்லை என்றால் என்றோ அவர்களை அடித்து விரட்டியிருப்பார்கள்!

பணத்தைக் கொண்டு வந்து கொட்டும் இந்தக் கொள்ளையர்களால்  சீன அரசாங்கத்திற்குப் பயன் உண்டு. அதனால் சீன அரசாங்கம் அவர்களைக் காட்டிக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது!

ஒரு வேளை மலேசிய அரசாங்கம்,  முன்னாள் பிரதமர் நஜிப் செய்தது போல,  அவர்களுக்குப் பெரிய பெரிய திட்டங்களைக் கொடுத்து, அந்தத் திட்டங்களில் உள்ள அனைத்து நிலங்களையும் சீனாவுக்கே சொந்தம் என்று எழுதிக் கொடுத்தால் அவர்கள் ஜோ லோவை காட்டிக் கொடுக்கத் தயாராக  இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை! 

இது நடக்காது என்று சொல்லவும் முடியாது! காரணம் இப்போது நாட்டை ஆள்பவர்கள் நாட்டை விறபதற்குத் தயாராய் உள்ளனர்! அந்த அளவில் அவர்கள் மிக மிக ஒற்றுமையாய் இருக்கிறார்கள்!

ஆக, பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர்கள் உண்மையைப் பேசுவார்கள் என்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத் தனம்!

நம்மால் அவர்களை ஒன்று செய்த விட முடியாது என்பதையும் அவர்கள் அறிவார்கள்>

அதனால் அவர்கள் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லை என்றால் இல்லைதான்!

பொய்யோ, மெய்யோ  எல்லாமே பிழைப்புக்காகத் தான்

No comments:

Post a Comment