Saturday 1 August 2020

அடுத்து எந்த மாநிலம்?

அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!

அடுத்த எந்த மாநிலத்திற்கு ஆப்பு என்று இன்னும் தெரிந்தபாடில்லை! சிலாங்கூரா அல்லது நெகிரி செம்பிலனா என்று  எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

சபா மாநிலத்தில் புதிய தேர்தலுக்கு வழி வகுத்துவிட்டார்கள். அது தாம் அம்னோவின் விருப்பமும் கூட. 

இப்போது  அம்னோ தனது கவனத்தை சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் தனது சாக்கடை அரசியலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது!

அம்னோவுக்கு உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக அவர்கள் எதனையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். கவிழ்ப்பு வேலை எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி.

நஜிப் மீதான நீதிமன்ற தீர்ப்பு அவர்கள் எதிர்ப்பார்த்தபடி நடக்கவில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைய முடியவில்லை! முழு பூசணிக்கையைச் சோற்றில் மறைப்பது என்பது சாத்தியமா?  ஆனால் சாத்தியம் ஆக வேண்டும்  என்பது அம்னோவின் தரப்பு! அம்னோவால் அது சாத்தியம் என்பதை முன்பு அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது பார்த்திருக்கிறோம்!

இன்னொரு கேள்வியும் நம்மிடையே தொக்கி நிற்கிறது. பி.கே.ஆர். கட்சியினர் அவர்களது கட்சியிலிருந்து விலகிய சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள்,   ஒப்பந்தப்படி வெள்ளி ஒரு கோடி கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின. 

இப்படி ஒரு கோடி திருப்பிக் கொடு என்று கேட்பதில் ஏதேனும் பயன்கள் இருக்கின்றனவா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  அவர்கள் அப்படிக் கட்சி மாறினாலும் இவர்கள் போகின்ற கட்சி இந்த சில்லறைகளை வீசி எறிய தயாராகத்தான் இருப்பார்கள்!   ஆட்சியிலிருக்கும் கட்சிகள் எதுவும் வறுமையில் இல்லை! அதனால் அது ஒன்றும் மாறிப் போனவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது.

எப்படியோ இந்தக் கட்சி மாறிகளால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். சொல்ல முடியாது. இப்படிக் கட்சி மாறும் போது அவர்களுக்கு ஏகப்பட்ட சில்லறைகள் கிடைக்கின்றன. அதாவது அவர்கள் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத அளவுக்கு இந்த ஒரே கட்சி தாவலினால் அவர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்!

பொதுவாகவே அரசியல்வாதிகளைப் பற்றி நமக்குத் தெரியும். நாலு காசு சம்பாதிக்க முடியாத நாதாறிகள் எல்லாம் அரசியல்வாதிகளாகி விடுகிறார்கள்! அவர்களது நோக்கம் தொண்டு செய்வது அல்ல! பணம் கொள்ளையடிப்பது!

பொறுத்திருந்து பார்ப்போம்!  என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்!

அடுத்து எந்த மாநிலம்?

No comments:

Post a Comment