Sunday 16 August 2020

திடீர் தேர்தலா...?

 தீடீர் தேர்தலா....? நாடு தாங்காது,,,,,,! என்று சொல்லி வருபவர்களில் நானும் ஒருவன்!

என்னைப் பொறுத்தவரை வெற்றி யாருக்கு என்பதில் அக்கறையில்லை.   காரணம் இது வரை நம்மை அலட்சியப்படுத்தியவர்கள் இனி மேலா  லட்சியப்படுத்தப் போகிறார்கள்?  ஒரே ஒரு இலாபம் உண்டு. நமது சமுதாயத்தைச் சேர்ந்த கட்சிகளுக்கு - அதன் தலைவர்கள் - ஓரளவு பணம் சம்பாதித்துக் கொள்ளுவார்கள்! நல்ல நேரம் இருந்தால் அவர்கள் செனட்டர் ஆவார்கள். அவ்வளவு தான்> பரவாயில்லை! பிழைத்துப் போறான் ஒரு தமிழன் என்று நினைத்தாலும் ஆராய்ந்து பார்த்தால் அவன் தமிழனாக இருக்க மாட்டான்!

தீடீர் தேர்தல், அதுவும் கொரொனா கொள்ளை நோய் நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் அல்லது அதன் பின்னரும் கூட, அடுத்த தேர்தல் வரும் வரை, நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.

நமக்கொன்றும் அவசரமில்லை! அரசியல்வாதிக்கு அவசரமுண்டு! அது அவனின் தவறு.  மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தான் அதற்கானத் தண்டனையை அவன் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!

தீடீர் தேர்தல் வேண்டும் என்பவர்களில் பலர் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்! அதற்கு மக்கள் என்ன செய்வார்கள்? அவனது ஊழலை மறைக்க அவனுக்குத் தீடீர் தேர்தல் அவசியம் என்று அவன் நினைக்கிறான்! அவனை ஆதரிப்பவர்களும் உண்டு!  அது தான் நமது மக்களின் பிரச்சனை!

இந்தத் திடீர் தேர்தலில் அவன் ஆட்சி அமைத்தால் எல்லா ஊழல்களும் மறைக்கப்படும். ஆட்சி அமைத்தாலே ஏறக்குறைய புனிதனாகி விட்டான் என்பது பொருள்! அதன் பின்னர் புனித யாத்திரை இன்னும் கொஞ்சம் புனிதனாக்கும்!

எவனோ ஒருவன் பதவிக்காக அடித்துக் கொண்டால் அடித்துக் கொள்ளட்டும்! நமக்கு அதில் பங்கு வேண்டாம்!

தனது கடமைகளைச் சரியாக செய்பவன் எதற்கும் பயப்படுவதில்லை.  ஆனால் அரசியல்வாதிகளை அவ்வளவு சீக்கிரத்தில் எடைப்போட்டு விட முடியாது!  அது ஒரு மானங்கட்ட இனம்!

தீடீர் தேர்தல் நடந்தால் 120 கோடி பணம் சும்மா அப்படியே கால்வாயில் தூக்கி எறியப்பட்ட பணத்திற்குச் சமம்! மக்களுக்கு வேலை இல்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. பெற்றோர்களே வயிற்றுப்பாட்டிற்குத் தாளம் போடும் போது இதில் என்ன மீண்டும்  தீடீர் தேர்தல்? கார் தவணை, வீட்டுத் தவணை - அரசியல்வாதி அப்பனால்தான் கட்ட முடியும்? மற்ற அப்பன்கள்?

தேர்தல் ஆணையம் 120 கோடி செலவாகும் என்பதாக மதிப்பிடுகிறது.  ஆனால் கூடுதலாகவே செலவாகலாம்! ம்திப்பீடுகள் என்றுமே சரியாக இருந்ததில்லை!

அதனால் தீடீர் தேர்தல் வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! என்பதே நமது வேண்டுகோள்.  இன்றைய அரசாங்கம் முழுமையாக ஐந்து ஆண்டுகளை முடிக்கட்டும்.  நொண்டி அடிக்கட்டும், பரவாயில்லை! குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கட்டும், பரவாயில்லை!  கொரொனோ அரசாங்கமாக இருக்கட்டும், பரவாயில்லை!

ஆனால் இப்போது தீடீர் தேர்தல் வேண்டாம்!

No comments:

Post a Comment