Friday 14 August 2020

முடியும் ஆனால் முடியாது!

 ஒரு பக்கம் உள்துறை அமைச்சு,  இந்திரா காந்தியின் முன்னாள் கணவர்  முகமது  ரிட்சுவான் அப்துல்லா, ஏதோ ஒரு வெளி நாட்டில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்! அவர் அடிக்கடி  இடம் மாறிக் கொண்டிருப்பதால் அவரைக் கண்டுப்பிடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக அமைச்சு கூறுகிறது!

அது ஒரு பக்கம் இருக்கட்டும். காவல்துறைத் தலைவர் "நாங்கள் ரிட்சுவானோடு தொடர்பில் தான் இருக்கிறோம். அரசியல்வாதி ஒருவரைக் கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்கிற ஆறுதலான செய்தியையும் கூறியிருக்கிறார்.

இப்போது அமைச்சர்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம் அனுபவமிக்க அமைச்சர்கள் இப்போது குறைந்து போய்விட்டனர்! அதனால் காவல்துறைத் தலைவர் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆக, முகமது ரிட்சுவான் எங்கிருக்கிறார் என்பது காவல்துறைக்குத் தெரியும். இனி அவர் வார்த்தை  மாற மாட்டார் என நம்பலாம்.

இப்போது அவர்களின் தலையாய பிரச்சனை என்ன என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது!

ரிட்சுவாவைப் பற்றி யாருக்கும் கவலயில்லை. அவர் ஒரு வழியைத் தேடிக் கொண்டார். அது பற்றி யாரும் விமர்சிக்க ஒன்றுமில்லை.

ஆனால் குழந்தை பிரசன்னா டிக்சா?  அவர் பிறந்த ஒரு சில மாதங்களிலேயே மதம் மாற்றப்பட்டு விட்டார்! அது சரியோ தவறோ,  நீதிமன்றம் அதனைத் தவறு என்று தீர்ப்பளித்து விட்டது.

இது ஒரு சிக்கலான பிரச்சனை என்று நாம் நினைத்தாலும் எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு உண்டு.  வெளியார்  தலையீடு இல்லாமல் இது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை.

இப்படி வருடக் கணக்கில் இந்தப் பிரச்சனை இழுத்துக்கொண்டு போவதே  ஒரே ஒரு காரணம் தான். அது ஒரு பக்க நியாயத்தையே பேசிக் கொண்ச்டிருக்கிறது!

எல்லாம் நல்லபடியாக முடியும் என நம்புவோம். முடியும்!

No comments:

Post a Comment