Tuesday 11 August 2020

சிவகங்கை திரள்!

 கொரோனா தொற்று எனது நமது நாட்டைப் பொறுத்தவரை வேகமாகப் பரவும் ஆற்றல் கொஞ்சம் குறைவு தான்.

ஆனால் இப்போது சிவகங்கை திரள் என்கிறார்களே இதன் பரவும் ஆற்றல், வேகம், சக்தி அனைத்தும் கொஞ்சம் அதிகம் என்கிறார்கள். இதன் மூலம் பாக்கிஸ்தான மற்றும் அரபு நாடுகள் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.  அரபு நாடுகளுக்குப் பயணம் செய்தோர் மூலம் அல்லது அங்கிருந்து வந்தவர்கள் மூலம் அது பரவியிருக்கலாம்.

சரி அதை விடுவோம். சிவகங்கை என்பது மருது சகோதரர்கள் அரசாண்ட இடம் என்பது, குறைந்தபட்சம்,  கண்ணதாசனின்"சிவகங்கை சீமை" திரைப்படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். 

அந்த அரசாட்சியின் கடைசி வாரிசான சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி என்னும் இளம் வயது இளைஞனை,  சுமார் 15-16 வயது, வெள்ளைக்காரர்களால் பினாங்குக்கு நாடு கடத்தியதாக வரலாறு கூறுகின்றது.

அப்படி நாடு கடத்தப்பட்ட துரைச்சாமி என்னும் அந்த இளைஞனின் வரலாறு அத்தோடு முடிவடைகிறது. பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட அந்த இளைஞனின் நிலை என்னவாயிற்று என்பது பற்றி நமது மலாக்கா முத்துக்கிருஷ்னன் அவர்களாலும் சொல்ல முடியவில்லை, நாவலாசிரியர் சை பீர்முகமது அவர்களாலும் சொல்ல முடியவில்லை. அவர்களைத் தவிர வேறு யார் நமக்குச் சொல்லப் போகிறார்கள்?

அதன் பிறகு இப்போது தான் சிவகங்கை என்னும் பெயர் அடிபடுகிறது. துரைச்சாமி என்னும் பெயர் அடிபடவில்லை. இனி மேல் அவர் பெயர் அடிபடும்! ஓர் அப்பாவி இளைஞனை, அவன் ஒரு வீர மரபைச் சேர்ந்தவன் என்பதனால்,  வெள்ளைக்காரர்கள் அவனை ஒழித்துக் கட்டி விட்டார்கள்.  

இப்போது தான் துரைச்சாமிக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. அவன் பெயர் அடிபடவில்லை என்றாலும் அவனது ஊர் பெயர் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது! நல்ல காரணங்களுக்காக அல்ல என்றாலும் அவன் என்ன நிலையில், என்ன மனநிலையில், என்ன மனக் கஷ்டத்தில், என்ன சிரமத்தில் இறந்தானோ - அதே வலியை, அதே கஷ்டத்தை இப்போது நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

எல்லாரையும் போல நானும் இந்தத் தொற்றுக்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன். வெள்ளைக்காரனுக்கு இருந்த அந்தத் திமிர் நமக்கும் இன்னும் குறையவில்லை! அதனால் அரசாங்கம் சொல்வதை "நான் கேட்க மாட்டேன்!" என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் துரைச்சாமி இங்கு சுற்றிக்கொண்டு தான் இருப்பார்! அவருடையை வேதனையை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்!

சிவகங்கை சீமை வாழ்க! மருது சகோதரர்கள் வாழ்க! வீரன் துரைச்சாமி வாழ்க!

சிவகங்கை திரள் மறைக!

No comments:

Post a Comment