Saturday 22 August 2020

பயணங்கள் தொடர்கின்றனவா?

 பத்திரிக்கைச செய்திகளை வைத்துப் பார்க்கும் போது வெளி நாட்டுப் பயணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன  என்று தான் நமக்குத் தோன்றுகிறது!

கொரோனா தொற்று என்பது ஆள் பார்த்து வருகிறதா என்கிற ஐயம் கூட நமக்கு ஏற்படுகிறது!  இந்த தொற்று நோயின் ஆரம்ப காலத்தில்  "இந்த தொற்று  எங்களை ஒன்னும் செய்யாது!" என்று சவால் விட்டவர்கள் தான் நாடு  பூராவும் பரப்பி விட்டனர்! இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனுபவபூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

இப்போது அரசாங்கம் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் கூட முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றது.  முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டனைகள் உண்டு.

ஆனாலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சிலர் செய்கின்ற தவறுகள் தெரிந்தும் அரசாங்கம் கண்களை மூடிக் கொள்கிறது! அதுவும் பதவியில் உள்ளவர்கள் எதற்கும் பயப்படுபவர்களாக இல்லை! தங்களுக்கு எந்த வியாதியும் ஒன்றும் செய்யாது என்று எண்ணுகின்றனர்! இவர்களுக்கும் ஊரடங்கை மீறும், சட்டங்களை மீறும் அகராதி இளைஞர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை! ஒன்று பதவியைக் காட்டி பல் இளிக்கிறது இன்னொன்று  கத்தியைக் காட்டி பல்லைக்காட்டுகின்றது!

கொரோனா தொற்று நோய்க்கு ஜாதி, மதம் வயது வித்தியாசம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. யாருக்கும் வரலாம். யாரும் சாகலாம், சாகாமலும் போகலாம்!

கேரளா, இந்தியாவில் 103 வயது,  93 வயது, 88 வயது  பெரியவர்கள் குணமடைந்திருக்கிறார்கள்! அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் குழந்தைகள், இளைஞர்கள் மரணமடைந்து வருகிறார்கள்!  எதையும் சொல்வதற்கில்லை!

நமது நிலை என்ன? அரசாங்கம் சொல்லுகின்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். "என்னை ஒன்னும் செய்யாது!" என்கிற மனப்போக்கு மாற வேண்டும்.

அதிகாரத்தில் உள்ளவர்களை நாம் பின்பற்ற வேண்டாம். அவர்களுக்குச் செத்தாலும் பணம் வரும் சாகாவிட்டாலும் பணம் வரும்! அதிகார துஷ்பிரயோகம் என்பது எல்லாக் காலத்திலும் உண்டு. அது அதிகாரிகளிடம் உண்டு. அரசியல்வாதிகளிடமும் உண்டு. அவர்களைப் போல நாம் செயல்பட முடியாது. அப்படி செயல்படவும் வேண்டாம்.

மிக முக்கியம் அரசாங்க வகுக்கும் கட்டுப்பாடுகளுக்குச் செவி மடுக்க வேண்டும்! அதுவே நமது கடமை!

No comments:

Post a Comment