Monday 10 August 2020

நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கிறோம்!

 இப்போதைய ஆட்சியைப் பற்றி நாம் என்ன சொல்ல நினைக்கிறோம்?

நல்லது சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் சொல்ல முடியவில்லை! பிரதமர் முகைதீன் யாசின் ஓர் இக்கட்டான சூழலில் இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது! 

நம்மைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான்.

அதற்கிடையே நடைபெறுகின்ற பதவிப் போராட்டங்கள், கட்சித் தாவல்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் இவைகள் எதனையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது! அவர்கள் அந்த ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்ய வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பக்கத்தான் ஆட்சியில் எதிர்பார்த்தபடி இந்தியர்களுக்கு அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்திருந்தால் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.

ஆனால் பிரிந்து போன ஒரு சில கட்சிகளின் கூட்டணி அப்படி ஒன்றும் பாராட்டும்படியாக இன்றைய நிலையில் இல்லை என்பது தான் நமக்கு வருத்தம்.

இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்து கோவில்களை உடைத்தார்கள். "உங்கள் மகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று சொன்ன காவல்துறைத் தலைவர் இப்போது இந்திரா காந்தியைப் பார்த்து ஓடி ஒளிகிறார்! முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தீடீரென ஊழல் குற்றம் சாட்டப்படுகிறார்! தேவை இல்லாமல் அவரது மனைவியும் குற்றம் சாட்டப்படுகிறார்! நஜிப் - ரோஸ்மா குற்றம் சாட்டப்பட்டால் நாங்களும் அதனையே செய்வோம் என்று அம்னோ இழுக்கும் இழுப்புக்கெல்லாம் பிரதமர் யாசினும் சேர்ந்து ஆட்டம் போட வேண்டியுள்ளது!

யோக்கியனும் அயோக்கியனும் ஒன்றா? ஒன்று தான் என்று இன்றைய ஆட்சி பறைசாட்டுகிறது!

நீதி, நியாயம் பற்றியெல்லாம் பேச எங்களுக்கு நேரமில்லை!  நாங்கள் இல்லாவிட்டால் பெரிகாத்தான் ஆட்சியைத் தொடர முடியாது என்பதால் நாங்கள் சொல்லுவதை பிரதமர் கேட்கத்தான் வேண்டும் என்கிறது அம்னோ!

இறைவா! எங்களுக்கு நல்லதொரு ஆட்சி வேண்டும். குறிப்பாக கடவுள் பயம் உள்ளவர்கள் ஆட்சியில் இருந்தால் தான் இந்த நாடு நல்ல நிலைக்கு வரும். இறைவனை மதிக்காதவர்கள், துதிக்காதவர்கள் உள்ள நாடு ஒன்றும் இல்லாமல் போய்விடும்!

அதனால்,  இறைவனை மதியாதவர்கள் மதிமயங்கிப் போகட்டும்!  செத்தொழியட்டும்! 

நாம் கேட்பதெல்லாம் நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். நல்லதொரு ஆட்சி வர வேண்டும். மக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ வேண்டும். மக்களை மதிப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

மீண்டும் தேர்தல் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. மக்கள் பணத்தில் இப்போது தேர்தல் நடத்துவது ஏற்புடையது அல்ல.

பணம் பற்றாக்குறை உள்ள நேரத்தில் தேர்தல் தேவை இல்லை!

பிரதமர் முகைதீன் யாசின் நால்லவர்களை வைத்து அரசாங்கத்தை வழி நடத்த வேண்டும்.

நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கிறோம்!

No comments:

Post a Comment