Thursday 13 August 2020

வருந்துகிறேன் நண்பரே!

 

 சிவகங்கையிலிருந்து கொரோனாவை இலவசமாக இறக்குமதி செய்த  நாசி கண்டார், உணவக உரிமையாளருக்கு ஐந்து மாத சிறையும், 12,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய வருத்தம் தான். 

ஆனால் என்ன செய்வது? அவர் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் அறிந்திருக்கிறாரா?

அறிந்து கொண்டிருக்க வேண்டும்.  அதுவும் குறிப்பாக உணவுத் துறையில் இருப்பவர்கள் அலட்சியமாக இருந்து விட முடியாது. 

தமிழ் நாட்டிலிருந்து இங்கு வரும் போது "எப்படி எப்படியோ" தப்பித்து இங்கு வந்து விடலாம்! ஆனால் நாம் செய்கின்ற தவறு எவ்வளவு பெரிது அதனால் மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அலட்சியப்படுத்தி விட முடியாது.

இங்கு வந்த பிறகாவது இங்குள்ள நடைமுறைகளை அவர் பின் பற்றிருக்க வேண்டும். அதனையும் அவர் அலட்சியப்படுத்தி இருக்கிறார்! அவர் தன்னை தனிமைப் படுத்தியிருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. ஹரிராயா ஹஜி அன்று அவர் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்! அதன் மூலம் தனது வேலையாள்களுக்கு இலவச இணைப்பாக கொரொனாவை அள்ளிக் கொடுத்திருக்கிறார்! அப்படித்தான் இந்த கொள்ளை நோய் கெடா, பினாங்கு என்று தெறித்துக் கொண்டிருக்கிறது!

இதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது! இதனால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறியாதவரா இந்த மனிதர்? 

இப்போது இவரது உணவகம் மூடப்பட்டிருக்கின்றது. வேலையாள்களுக்கும் வேலை இல்லை. இவருக்கும் சிறைத் தண்டனை அத்தோடு அபராதம் வேறு.

இதைத் தான் பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அத்தோடு இவரது உணவகத்தைப் பற்றியே இப்போது சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது.  மக்களின் நலனில் அக்கறையற்ற இவர் எவ்வளவு அக்கறையோடு உணவகத்தை நடத்துகிறார்? என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது!

வருந்துகிறேன் நண்பரே!  நீங்கள் உணவகத் தொழிலுக்கு இலாயக்கற்றவர் என்பதைத் தான் உங்களின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன! வெளியே வந்ததும் உங்கள் தொழிலை  மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தான் நமது அறிவுரை!

No comments:

Post a Comment