Friday 25 September 2020

பாடுவதை நிறுத்தியது பாடும் நிலா

 

 
 
 
 
 
 
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்தார்.  நீங்கள் படிக்கின்ற இந்த நேரம் இது பழைய செய்தி.
 
பழையதோ புதியதோ மிகவும் வேதனை தரும் செய்தி.  நேற்று, 25.9.2020, வெள்ளிக்கிழமை, நண்பகல் 1.04 மணிக்கு, இந்திய நேரப்படி, சென்னையில் காலமானார்.  அவருக்கு வயது 74. 

கொரோனா தொற்று நோயினால் மரணமடைந்த பிரபலமான முதல் பலி.

அவர் பிறந்தது சென்னை மாகாணத்தில், சென்னையை ஒட்டிய நல்லூர் என்கிற  கிராமத்தில் 4-ம் தேதி,  ஜூன் மாதம்,  1946-ம் ஆண்டு.
 
தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்தவர் எஸ்.பி.பி.  அவர் பதினாறு இந்திய மொழிகளில் பாடியவர்.  தமிழில் அதிகமாகப் பாடியவர்.  உலக அளவில் தமிழர்களின் மனதைக் கவர்ந்தவர். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் அவருக்குப் பல விருதுகள் கொடுத்து அவரைக் கௌரவித்திருக்கின்றன.

அவர் சுமார் 42,000 பாடல்களைப் பாடியவர். அதற்காக கின்னஸ்  உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவர்.

இசையின் மீது உள்ள பற்றுதலினால் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் ராகங்களின் பெயரை வைத்திருக்கிறார். சரணம், பல்லவி  - இவர்கள் தான் எஸ்.பி.பி. சரண், பல்லவி. 
 
அவர் மரணமடைந்து விட்டார் என்பது உண்மை தான். ஆனால் அவரது குரல் ஒலிக்காத நேரமில்லை, காலமில்லை  எக்காலமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாமும் எந்த நிமிடத்திலும், எந்த நேரத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 
 
பாடுவதை நிறுத்தினாலும் பாடியவைகளை நிறுத்த முடியாது!
 

No comments:

Post a Comment