Saturday 26 September 2020

யார் முதலில்? எலியா மனிதனா!

 


 

 இதையெல்லாம் பார்ப்பதற்குக் கோபம் தான் வருகிறது!

கோலாலம்பூர் மாநகர் மன்றம் நடத்திய திடீர் சோதனையில் பிரபலமான ஒரு ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் கண்டறிந்தவை:

ரொட்டிகளைத் தயாரிக்க கழிவறை நீரைப் பயன்படுத்துவது  தெரிய வந்தது. அதன் தரைகள் அழுக்காகவும், ஈரமாகவும் இருந்தன.  ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் தரையில் கிடந்தன.  அழுக்குப் படிந்த சுவர்கள். எங்குப் பார்க்கினும் எலிகளின் எச்சம்! அத்தோடு வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்களுக்கு தைஃபாய்ட் ஊசி போடப்பட்டிருந்தன. 

அடுத்த நாளே அந்த ரொட்டிதொழிற்சாலை மூடப்பட்டது! சுபம்! 

இதைத்தான் மாநகரத்திடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோமா என்று நாம் கேட்கலாம் தானே! இவர்கள் திடீர் திடீரென்று சோதனைகள் செய்வார்களாம்.   அப்போது இது போன்ற அயோக்கியத்தனங்களைக் கண்டு பிடிப்பார்களாம்!

ஆனால் இந்த தொழிற்சாலைகள் செய்கின்ற ரொட்டிகளை இத்தனை நாள்களாக, இத்தனை மாதங்களாக நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே அதற்கு இந்த மாநகரம் என்ன பதிலை வைத்திருக்கிறது? 

பொது மக்களைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? அதற்கு ஒரு பதிலை பொது மக்கள் வைத்திருக்கிறார்கள். "பணத்தை வாங்கிக்கிட்டு விட்டுறானுங்க!"  என்கிற பதில் எல்லாரிடமிருந்து வரும்!

நமது கேள்வி அவர்களின் உரிமம் ஏன் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது என்பது தான். இது உணவு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். அது எப்படி எதோ நாய்கள் சாப்பிடுகின்ற உணவுகளைப் போல மாநகரம் பார்க்கின்றது என்பது தான் நமக்குப் புரியவில்லை!

இது போன்ற தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள். சமரசம் கூடாது என்பது தான் நமது நிலை!

அது சரி! இவர்களின் ரொட்டிகளை முதலில் சாப்பிடுவது எலிகளா, மனிதர்களா?

No comments:

Post a Comment