Friday 4 September 2020

அரசியல்வாதிகளே ஊழல்மிக்கவர்கள்!

 நாட்டை ஆளுகின்ற, நாட்டை வழி நடத்துகின்ற அரசியல்வாதிகளே அதிக ஊழல் மிக்கவர்கள் என்பதாக தேசிய ஊழல் எதிர்ப்பு மையத்தின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட் கூறி இருக்கிறார்!

நமக்கு இது புதிய செய்தி அல்ல! ஆனால் அதனை தலைமை இயக்குநர் கூறுவது தான் நமக்குப் புதிய செய்தி!

"குடி உயர கோல் உயரும்"  என்பார்கள். குடியும் உயரவில்லை! கோலும் உயரவில்லை! கோல் சாய்ந்து நீண்ட  நாட்களாகி விட்டன. டாக்டர் மகாதிர் என்று நாட்டின் பிரதமரானாரோ அன்றே கோல் சாய்ந்துவிட்டது!

இப்போது அவரது தவறுக்குப் பரிகாரம் செய்ய நினைக்கிறார்! ஆனால் அவரால் முடியவில்லை! முடியவும் முடியாது!  காரணம் கோல் சாய்ந்து அதற்குப் பாடையும் கட்டிவிட்டார்கள்!  அனைத்துக்கும் காரணம் அவரது கட்சியினர் தாம்! அவர் தான் அவர்களை வளர்த்து எடுத்தார்! கொஞ்சி அணைத்தார்! இப்போது எப்படி அதனைச் சரி செய்வது?

எப்படி இருப்பினும் வருங்காலங்களில் இது சரி செய்யப்படும் என நம்புவோம்.

அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்ட ஊழல் இப்போது எல்லாத் துறைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை! அரசாங்கத் துறைகளும் இன்று ஊழல் நிறைந்ததாக ஆகி விட்டது! 

வெளி  நாடுகளிலிருந்து  வந்தவர்கள் ஊழல்  வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள்  என்பதும் உண்மை! இன்று அவர்கள் மலேசியர்களின் உரிமைகளில் கை வைக்கிறார்கள் என்றால் அது ஊழல் மூலம் தான் நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். 

இன்று அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்றால் அது எப்படி முடிகிறது? சந்தைகளில் அவரகள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்! சிறு சிறு வியாபாரங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்றால் அது எப்படி அவர்களால் முடிகிறது?

அது தான் நாடு நாசமாகப் போகிறது என்றால் அதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகள் தான்! இதில் எந்த சந்தகமுமில்லை!

ஊழல் மட்டும் தானா அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு?  இல்லை! அரசியல்வாதிகள் என்றால் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்< இனப்பற்று இல்லாதவர்கள், மொழிப்பற்று இல்லாதவர்கள்,  சமயப்பற்று இல்லாதவர்கள் - இப்படி இல்லாதவர்கள் பட்டியல் நிறைய உண்டு!

நாம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஊழல் எதிர்ப்பு மையத்தின் தலைவரே இப்படி ஓர் அறிக்கையை வெளியிடுகிறார் என்றால் இனி அது மக்கள் மனதில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்துப் பார்ப்போம்.

ஊழல் ஊழல் என்றாலே அரசியல்வாதிகள் தான்!

No comments:

Post a Comment