Sunday 27 September 2020

ம.இ.கா. மகளிர்க்கும் தான்!

 இந்தியப் பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு கட்சி என்றால் அது ம.இ.கா. வாகத்தான் இருக்க முடியும்!

காரணங்கள் உண்டு. பெண்கள் தான், ஆண்களை விட, ம.இ.கா.வை அதிகம் எதிர்ப்பவர்கள். இதனை சென்ற பொதுத் தேர்தலில் கண்டோம். 

பொதுவாக ம.இ.கா.வில் பெண்களுக்கான பங்கு எதுவும் இல்லை.  அவர்கள் செய்வது எல்லாம் முட்டாள்களுக்கும் மலர் தூவி வரவேற்கும் முட்டாள்கள் வேலை!  

இதனை வேறு, அவர்களைச் சார்ந்த கட்சிகளில், செய்கிறார்களா பாருங்கள்?  அவர்கள் செய்ய மாட்டார்கள்! செய்யக் கூடாது என்பது சீனப் பெண்களுக்கும் மலாய் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் பாடம். 

அதனை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை.   மலர் தூவி வரவேற்பது தான் பெண்களின் வேலை என்பதாக நாம் பழக்கப்படுத்தியிருக்கிறோம்!

முட்டாள்கள் வேறு என்ன சொல்லிக் கொடுப்பார்கள்?  பெண்கள் முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள்!

ஜ.செ.க. வின் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் அப்படி என்ன செய்து விட்டார்?  அப்படி என்ன செய்தாலும் அது பற்றி எங்குப் பேச வேண்டுமோ  அங்குப் பேச வேண்டும். அதான் சட்டமன்றம் இருக்கிறதே அங்குப் பேசலாம். அங்குப் பேச வக்கில்லாத ஒரு கட்சி என்றால் அது ம.இ.கா. தான்!

இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ம.இ.கா. தலைமைத்துவும் என்ன சொல்லுகிறதோ அதைத் தான் இந்த வாலாட்டிகள் செய்யும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள்! ஆக, குற்றம் செய்பவர்கள் கட்சியை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர்கள் தான்!

அவர்கள் இந்திய பெண்கள் மலர் தூவி வரவேற்கும் ஒன்றே போதும் என்று நினைப்பவர்கள்!  அவர்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் பெரிய பதவிகளில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்!

இவர்களைத் தான் நாம் நம்புகிறோம். ஏதோ நம்மைக் காப்பாற்ற வந்த வாராது போல் வந்த மாமணிகள் என்று நினைக்கிறோம்!

இத்தனை ஆண்டுகள் நம்மைக் குப்பைத் தொட்டியில் வீசிய இந்த ஜென்மங்கள் இனி மேல் மட்டும் நம்மைக் கோட்டைக்கா கொண்டுப் போகப் போகிறார்கள்?

பெண்களை இழிவு படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கிர புத்தி உடையவர்களாக இருக்க வேண்டும். ம.இ.கா.வினரைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்ய மாட்டார்கள் என்பது தான் உண்மை!

பெண்களே! நீங்கள் தான் இந்த சமூகத்தில் ஆண்களை விட விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறீர்கள். அதனைத் தொடருங்கள். . ம.இ.கா. மாதர்கள் பூ தூவி புன்னைகையோடு வரவேற்கட்டும்!

நாம் அவர்களிடமிருந்து விலகி நிற்போம்! நாம் யார், நமது பெண்கள் யார் என்பதை அவர்களுக்குக் காட்டுவோம்!

No comments:

Post a Comment