Thursday 17 September 2020

வேதனைக்குள்ளாக்கும் செய்தி!

 புலனத்தில் ம.இ.கா.வினர் பெண்களை மிக மிகக் கேவலப்படுத்திப் பேசுவதாக அதுவும் அதனைத் தலைப்புச் செய்தியாகப் படித்த போது மிகவும் வேதனை  அடைந்தேன்.

இப்படியெல்லாம் செய்வதற்கு நம்மிடையே மனிதர்கள்  இன்னும்  இருக்கிறார்களா என்று  வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.

பெண்களைக் கேவலப்படுத்தும் சமுதாயம் எந்தக் காலத்திலும் முன்னேற்றத்தைக் காண முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதுவும் "இந்தியர்களுக்கு நாங்கள்  தான் எல்லாம்!" என்று மார்தட்டும் ம.இ.கா. வினர் இப்படி செய்வதை  நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.ம.இ.கா. முன்னாள் தலைவர் துன் சா.சாமிவேலு அவர்கள் காலத்திலும் சரி அதன் பின்னரும் சரி அவரது துணைவியார் தோ புவான்  இந்திராணி சாமிவேலு ம/இ.கா. விலும்,  பொது இயக்கங்களிலும்  மிக முனைப்போடு வேலை செய்தவர் அவரைப் பற்றியான செய்திகளை இப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் காண  முடிவதில்லை. 

இது தான் நமக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. இவரை வேலை செய்ய விடாமல் இந்த ம.இ.கா. குழு தான் பின்னணியில் இருந்து கொண்டு செயல்  படுகிறதோ என்று நினக்கத் தோன்றுகிறது. ஏன் செய்யக் கூடாது? அவர்கள் தான் பெண்களை வெறுப்போடு பார்ப்பவர்களாயிற்றே!

இவர்களின்  பெண்களை வெறுக்கும் செயல்பாட்டுக்கும் வேறு ஒன்றுக்கும் நாம் முடிச்சுப் போட வேண்டியுள்ளது. பெண்களுக்கு முடிச்சு போடும் வேலையிலும் இவர்கள் ஈடுபட்டிருத்தைப் பார்க்கும் போது வேறொன்றும் நமக்கு ஞாபத்திற்கு வருகிறது. 

சாமிவேலு - மீரியாம் ரோசலின் இணைப்புக்கும்  சாமிவேலுவை முடிச்சு போட வைத்தற்கும் இவர்களே  காரணமாக இருந்திருப்பார்களோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.  காரணம் இவர்கள் மற்ற வீட்டுப் பெண்களுக்கு முடிச்சுப் போடும் போது இதை மட்டும் அவர்கள் விட்டு வைத்திருப்பார்களா என்று நம்மை யோசிக்க வைக்கிறது!

ஒன்றை மட்டும் நான் சொல்லுவேன்.  தமிழ்ப் பெண்களைத் தாக்குபவர்கள் தமிழர்கள் இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தங்களைத் தமிழர்கள்  என்று சொல்லிக் கொள்ளும் தமிழரல்லாதாரே இத்ற்குக் காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம்.  அவர்களுக்குத் தமிழர்கள் மீதான ஒரு கோபம் இருக்கிறது.  தமிழர்களைத் தொடர்ந்தாற் போல நசுக்க வேண்டும்  என்கிற ஆத்திரம் இருக்கிறது. காரணம் நாம் தானே அவர்களுக்கு எதிரியாக இருக்கிறோம்! நம்மைக் கீழ் மட்டத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம்!

இவர்களையெல்லாம் மீறி தான் தமிழ்ப்  பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது.   அவர்கள் தாக்கும் பெண்களைப் பாருங்கள். . யாரேனும் நாயர், மேனன், ரெட்டி, நாயுடு - என்று இருக்கிறதா பாருங்கள். அப்படி இருந்திருந்தால் அவர்கள் சமூகமே இந்நேரம் கொந்தளித்திருப்பார்கள்; அவர்களைக் கூண்டில் ஏற்றியிருப்பார்கள்!

எப்படியோ இந்தக் கூட்டத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து நான் பாராட்டுகிறேன்.  அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எங்கே ஊர் மேய்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு மற்றவர்கள் வீட்டுப் பெண்கள் மீது கல்லெறியும் இவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். 

இன்னொன்றையும் நாம் மறந்துவிடக் கூடாது.  இவர்களுக்கு இவர்களுடைய தலைமை ஊக்க்ப்படுத்துவதால் தான் இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! இதுவரை அவர்கள் இதனைக் கண்டிக்கவில்லையே!  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!

இது போன்ற செய்திகள் நமக்கு வேதனை அளிப்பது உண்மை தான்! சட்டம் தான் இவர்களுக்கு ஒரு போதனையைக் கொடுக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment