Saturday 5 September 2020

கடைசி காலம் வரை....!

 முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தனது கடைசி காலம்வரை ஊழலுக்கு எதிராகப் போராடுவேன் என்கிற கனவுகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! அதனைத் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். 

ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் என்பது அரசியல்வாதிகளால் தான் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். உலகெங்கிலும் அரசியல்வாதிகள் தான் காரணகர்த்தாக்கள். ஊழல் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது!

இன்று உலகில் ஊழல் இல்லாத நாடே இல்லை என்கிற அளவுக்கு ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழிக்க முடியும் என்னும் நம்பிக்கையே இப்போது எந்த நாட்டு குடி மக்களுக்கும் இல்லை!  அதை ஒழிக்க அரசியல்வாதிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை!

பொது மக்கள் மனம் வைத்தால் ஒழிய ஊழலை ஒழிக்க முடியாது!  ஆமாம்  பொதுத் தேர்தலின் போதும் ஊழல் அரசாங்கத்தை நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது  என்கிற  மன உறுதியோடு செயல்பட்டால் ஊழலை ஒழித்து விடலாம்! ஆனால் நம்மால் முடியவில்லையே!

நம் நாட்டைப் பொறுத்தவரை ஊழலின் தொடக்கம் என்றால் அது டாக்டர் மகாதிரின் காலத்தில் தான் என்று அடித்துச் சொல்லலாம்!  பூமிபுத்ராக்களின் 'முன்னேற்றம்' என்பதே அப்போது தான் ஆரம்பமாகிறது! அந்த முன்னேற்றத்தை அவர் ஊழலலிருந்து தான் ஆரம்பிக்கிறார்! நேர்மை, நியாயம் என்பதெல்லாம் தவிடுபொடியாகிறது!

அவருடைய ஒரே நோக்கம் பூமிபுத்ராக்களின் முன்னேற்றம் மட்டும் தான். அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி யாருக்கும் குறை இல்லை. ஆனால் அதனை அவர் கொண்டு சென்ற விதம் ஊழலுக்கு விதை விதைத்து தண்ணீர் விட்டு வளர்த்தது தான்! அது இப்போது ஆலமரமாக வளர்ந்து விட்டது!

அதன் உச்ச கட்டம் தான் முன்னாள் பிரதமர் நஜிப்-ரோஸ்மா  ஊழல்!  நஜிப் நாட்டையே சீன நாட்டினருக்கு விற்கின்ற அளவுக்குப் போய் விட்டார்! ஆட்சி மாற்றம் ஏற்பட்டதினால் நாடும், மக்களும் தப்பித்தனர்!

இப்போது டாக்டர் மகாதிர் தனது கடைசி காலம்வரை ஊழலை எதிர்த்துப் போராடுவேன் என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு வருகிறார்!  அவர் செய்த தீமைகளை அவரே தான் சரி செய்ய வேண்டும்.

எப்படியோ அவருடைய கடசி காலம்வரை என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

No comments:

Post a Comment