Sunday 13 September 2020

மேலவையில் டத்தோஸ்ரீ வேள்பாரி!

 மேலவை உறுப்பினர் அதாவது செனட்டர் பதவி ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?

சுருக்கமாக செனட்டர் பதவி என்பது சேவையாளர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஒரு பதவி.

அதன் நோக்கம் நல்லதொரு நோக்கம்.  சேவையாளர்களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்ற அது ஓர் அங்கீகாரம்.

சமீபத்தில் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி அதாவது துன் சாமிவேலுவின் மகன், செனட்டராக பதவி ஏற்றார் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

வேள்பாரி கடந்த காலங்களில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைமைச் செயலாளராக இருந்தவர். கடந்த ஆண்டு அந்த பதவியிலிருந்து விலகினார்.  தனது வணிக நிறுவனங்களைக் கவனித்துக் கொள்ளவும் உடல் நலம் குன்றியிருக்கும் தனது தந்தை துன் சாமிவேலுவைக் கவனித்துக் கொள்ளவும் அவர் பதவி விலகுவதாக  அறிவித்தார்.

வேள்பாரி ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். அவர் அங்கும் பிரபலமான வணிகராக விளங்கியவர் என்பதாக முன்னர் பத்திரிக்கைகளில் வந்த செய்தி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. பின்னாளில் அவர் ம.இ.கா.வின் மைக்கா ஹோல்டிங்ஸ்  நிறுவனத்தின்மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர்.

டத்தோஸ்ரீ வேள்பாரி அரசியலில் ஆற்றிய தொண்டும் அவரது வணிக அறிவும் இந்த சமுதாயத்திற்குப் பயன்படும்  என நம்பலாம்.  அவருக்குக் கிடைத்திருக்கும் இந்த செனட்டர் என்னும் அங்கீகாரம் இந்த சமுதாயத்திகுப் பயன்படும்   என நம்புகிறோம்.

இந்த பதவியில் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களால் இயன்றதைச் செய்திருக்கின்றனர்.  இவரும் தனது பங்கை கடமை உணர்ச்சியுடன் செய்வார் என்று இந்த சமுதாயம் நம்புகிறது. செய்வார்!

டத்தோஸ்ரீ வேள்பாரிக்கு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment