Thursday 24 September 2020

அரசியல் மாற்றம் ஏற்படுமா?

 நாட்டு அரசியிலிலே ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது!

அரசியல் மாற்றம் ஏற்படுமா என்கிற ஓர் ஆர்வம் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

எந்நேரத்திலும் அரசாங்கம் கவிழலாம் என்கிற எதிபார்ப்பு நாட்டுக்கு நல்லதல்ல! அது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெரிகாத்தான் அரசாங்கம் ஓர் இரண்டு பேர்களை வைத்துக் கொண்டு சர்க்கஸ் ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது!

ஒரு நிலையான அரசாங்கம் இல்லாவிடில் என்ன நடக்கும் என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!  பெரிக்காத்தான் கூட்டணியில் உள்ளவர்கள் ஆடுகிற ஆட்டத்துக்கெல்லாம் பிரதமர் முகைதீன் ஆடிக்கொண்டிருக்கிறார்! என்ன செய்ய? அவர் தனது அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது! ஏதோ கொரோனா தொற்று நோய் காரணமாக இத்தனை நாள்கள் அவர் பிரதமராக இருந்து கொண்டிருக்கிறார்!

இந்நேரத்தில்  அன்வார் இப்ராகிம்  அடுத்த பிரதமர் நான் தான்! மொகிதீன் அரசாங்கம் கவிழ்ந்தது என்பதாக அதிரடி அறிவிப்பைச் செய்திருக்கிறார்!  தனக்குப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறுகிறார். 

இந்த நேரத்தில் நமக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. மாமன்னர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாமன்னர் மருத்துமனையிலிருந்து வெளியான பின்னரே  என்ன நடக்கிறது என்கிற உண்மை நிலவரம் தெரிய வரும். 

மாமன்னர் வெளியாக ஒரு வாரமோ அல்லது பத்து நாள்களோ ஆகலாம்.  இந்த காலக் கட்டத்தில் என்ன நடக்கிறது, என்ன நடக்கும், என்ன குதிரை பேரங்கள் நடக்கும்,  எவன் எவன் ஓடுவான் ஒளிவான் - இந்த நிலையில் அன்வார் இப்ராகிமால் அரசாங்கம் அமைக்க முடியுமா என்று சோதித்துப் பார்க்கின்ற ஒரு இடைவெளியாகத் தான் இதனை நான் பார்க்கிறேன். 

இவ்வளவையும் மீறி அரசாங்கம் அமைந்தால் அன்வார் இப்ராகிம் அசைக்க முடியாத பிரதமராக அடுத்த தேர்தல் வரை நீடிப்பார் என நம்பலாம்.  அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன். 

ஒரே காரணம் தான். இவ்வளவு நம்பிக்கையோடு அரசாங்கம் அமைப்பேன் என்று அவர் கூறுகின்றார் என்றால் தன்னை பெரிய அளவில் உறுதிப்படுத்திக் கொண்டு தான் அவர் இந்த அறிவிப்பை வெளியிடுகின்றார் என நம்பலாம்.

அரசியல் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்!

No comments:

Post a Comment