Thursday 10 September 2020

ஆதரவு கூடுகிறதா?

 பிரதமர் முகைதீனுக்கு மக்களிடையே ஆதரவு கூடுவதாக மெர்டேக்கா சென்டர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வருகிறது.

அந்த ஆதரவாளர்களில் நானும் ஒருவன். தீவிர ஆதரவாளன் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. அவருடைய ஆட்சி அடுத்தப் பொதுத் தேர்தல் வரும் வரை நீடிக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

காரணம் தீடீர் தேர்தல் வருவதை நான் எதிர்க்கிறேன்.   ஒரு பொதுத் தேர்தலை நடத்த கோடிக்கணக்கில்  மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப் படுவதை நான் விரும்பவில்லை.  அது பொது மக்களின் பணம்.  பொது நலனுக்காக அந்தப் பணம் பயன் படுத்தப்பட்டால்  நாட்டுக்கு நல்லது. அது ஏன் வீணடிக்கப்பட வேண்டும் என்பது தான் நான் தொடுக்கும் கேள்வி.

மற்றபடி இன்றைய அரசாங்கம் கேடு விளைவிக்கும் வரப்போகின்ற அரசாங்கம்  வாரிக் கொடுக்கும் என்பதை நான் நம்பவில்லை! இப்போது என்ன நடக்கிறதோ அப்போதும் அது தான் நடக்கும்!

பக்காத்தான் அரசாங்கம் நீடித்திருந்தால்  நமது சமூகத்தின் ஒரு சில காரியங்கள் நிறைவேறியிருக்கும். அது முடியாமல் போயிற்றே என்கிற வருத்தம் எனக்கு உண்டு,  ம.இ.கா. வினர் வந்தால் எல்லாமே பூஜ்யம்! அவர்களே பூஜ்யம் தானே!  அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்! மலாக்காவில் ஏற்பட்ட கல்வி அமைச்சின் ஒரு மாற்றத்தை அவர்கள் கண்டு கொள்ளவில்லையே!  யாருக்கு செனட்டர் பதவி என்பதிலேயே அவர்கள் கவனத்தைச் செலுத்துவார்கள்! நாம் அறிந்தது தானே!

பாரிசான் வந்தால் கல்வியில் கை வைக்கும்! பாஸ் வந்தால் கோவிலில் கை வைக்கும்!  இதை நாம் பார்த்து வந்திருக்கிறோம்.  எந்த சட்டதிட்டங்களையும் அவர்கள் மதிப்பதில்லை! சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும் என்கிற சுமாரான அறிவு கூட அவர்களுக்கில்லை! ம.இ.கா.வும் கேட்கப் போவதில்லை!

கோவிலை சேதப்படுத்திவிட்டு ஒரு மனநோயாளி அதைச் செய்தான் என்று வழக்கம் ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள்! இப்போதும் அது நடக்கும்! அப்போதும் அது நடக்கும்!

பிரதமர் முகைதீனுக்கு ஆதரவு கூடுவதை நான் விரும்புகிறேன்.  அவர் காலத்தில்  அவர் நல்லதைச் செய்ய வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். ஒரு சில நல்ல காரியங்கள் செய்தாலே போதும்.  அந்த நல்ல காரியங்களைச் செய்யக் கூட, கூட இருக்கும் குள்ளநரிகள் செய்ய அவரை விடுவதில்லை! 

எந்த நேரத்திலும் அவரது அரசாங்கம் கவிழலாம்!  ஆனால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதைத் தான் நான் விரும்புகிறேன்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்! தங்களது   சுயநலனுக்காக, முன்னாள் பிரதமர் நஜிப்பைப் போல, எதையும் செய்யத் துணிந்தவர்கள்! நாட்டையே விற்க நினைப்பவர்கள்!

மக்களின் ஆதரவு முகைதீனுக்குக் கூட வேண்டும்! அரசாங்கம் நிலைக்க வேண்டும்! என்பதே எனது பிரார்த்தனை!

No comments:

Post a Comment