Tuesday 29 September 2020

இது தான் பெருந்தன்மையா?

 அம்னோ தரப்பிலிருந்து இப்போது நிறைய தடவை  பெருந்தன்மையப் பற்றி பேச்சுக்கள் எழுகின்றன!

அம்னோவுக்கும் பெருந்தன்மைக்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குப் புரியவில்லை!

அப்படி என்ன பெருந்தன்மையோடு இவர்கள் நடந்து கொண்டார்கள்? 

முதலில் இவர்கள் எந்த காலத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள் என்று பார்த்தோமானால் அவர்கள் எந்த காலத்திலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை என்கிற பதில் தான் வரும்!

இப்போதும் கூட ஒரு சில அரசியல்  காரணங்களுக்காக அவர்கள் தங்களது "பெருந்தன்மையை" விட்டுக் கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்! அது அவர்களுக்கும் தெரியும்! இதிலே என்ன பெருந்தன்மை?

பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தார்களாம்!  அதைத்தான் நீங்கள் செய்ய முடியும்! வேறு என்ன உங்களால் செய்ய முடியும், சொல்லுங்கள்?  பேராக் மாநிலத்திலும் இதே நிலை தான்! கூடுதலான இடங்கள் இருந்தும் "நாங்கள் விட்டுக் கொடுத்தோம்!" என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.  ஆகப் போவது ஒன்றுமில்லை! அதைத்தான் நாம் சொல்ல நேரிடும்! சபாவிலும் அதே நிலை தான்.

ஏன்? இப்படி ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியாதா!  

ஆமாம்! மற்றவர்கள் எல்லாம் பேரும் புகழும் சேர்த்து வைத்தால் நீங்கள் ஊழல், ஊழலாக சேர்த்து வைத்திருக்கிறீர்களே அது போதாதா உங்களின் பெருந்தன்மைக்கு? இப்போது மக்களிடையே  உங்களின்  முகத்தைக் காட்டுவதைக் கூட எவ்வளவு கேவலமாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா!

உங்களின் அரும்பெரும் பிறப்புக்களான நஜிப்-ரோஸ்மா- ஸாஹிடி - போன்ற பிறப்புக்கள் இருக்கும் வரை நீங்கள் இப்படித் தான் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்!

இந்த நேரத்தில் இப்படி ஒரு பெருந்தன்மை உங்களுக்கு வந்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்!  ஆமாம் அது தான் எங்களுக்குத் தேவை. நீங்கள் மக்களிடம் சென்று உங்கள் முகத்தையே காட்டக் கூடாது என்பது தான் எங்களது விருப்பம்!

இனி எந்த காலத்திலும் உங்களின் ஆட்சி அமையாது என்பதில் மலேசியர்கள் உறுதியாக இருக்கிறார்கள்! அதற்காக இனி நீங்கள் பெருந்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு

No comments:

Post a Comment