Tuesday 15 September 2020

மலேசிய இந்தியர்கள் இயக்கம்

 மலேசிய இந்தியர் இயக்கம் என்பதாக ஒரு புதிய இயக்கம் இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக இந்தியர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது!

இயக்கம் என்றாலே கொஞ்சம் தயக்கம் உண்டு! பத்தோடு பதினொன்று, அவ்வளவு தான்!  இது வரை உள்ள இயக்கங்கள் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை!

அதுவும் திடீர் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்கிற நிலையில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? தேர்தல் நேரங்களில் பல இயக்கங்கள் பூற்றிசல்கள் போல தோன்றுவது எப்போதும் நடப்பது தான்! காரணம் இப்போது தான் இயக்கங்களுக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பது தெரிந்த விஷயம் தான்! தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்ற சில்லறை விஷயத்தில் ஈடுபடமாட்டார்கள் என்றாலும் கடைகோடியில் உள்ளவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று சொல்லுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே!

பொதுவாக 'இந்திய' இயக்கங்கள் என்றாலே கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  எல்லாம் அனுபவம தான்! இந்தியர் என்றால் சொன்னாலே அங்கு தமிழனுக்கு வேலை இல்லாமல் போகிறது. தமிழருக்கு அதனால் பயனில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். 

இந்தியர் என்றாலே தெலுங்கர்களும், மலையாளிகளும் தான் பயன்பெறுகிறார்கள் என்பது தான் நமக்குள்ள அனுபவம்.  தமிழர்கள் பயன் பெறுவதில்லை.  பதவியில் இருப்பவர்களும் அவர்கள் தான், முன் வரிசையில் இருப்பவர்களும் அவர்கள் தான், முந்திக் கொள்பவர்களும் அவர்கள் தான் - தமிழர்களுக்குத் தேவையான செய்திகள் கிடைக்கும் முன்பே கஜானா காலியாகி விடுகிறதே!  உள்ளுக்குள்ளே அவர்கள் வேலை செய்கிறார்கள்! தமிழன் வெளிப்படையாக இருப்பதால் அனைத்தையும் இழக்கிறான்!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு.  ஓர் உணவகத்திற்குப் பெரிய அளவில் அரசாங்கத்தின் நிதி உதவி கிடைத்தது. வாழ்த்துகிறோம்! அந்த உணவகத்தின் உரிமையாளர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பெரிய தொகையை வாங்கிக் கொடுத்தவர் "மக்கள் சக்தி" இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் நாயர்! இதனை நான் குறையாகச் சொல்லவில்லை.  தமிழன் என்றால் ஆயிரம், இரண்டாயிரம் - நாயருக்கு ஒரு சில இலட்சங்கள் என்பது தான் நமது ஆதங்கம்! ஏன்? நாம் மட்டும் தொழிலில் வளரக் கூடாதா?  தங்கள் முன்னேற்றத்திற்காக தமிழன் வேண்டும் ஆனால் அவன் மட்டும் வளரக் கூடாது! என்ன நியாயம் இது?

ஆனால் இந்த இயக்கம் என்ன நோக்கங்களைக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அரசியலில் பல அராஜகங்கள் நடந்திருக்கின்றன அதனைத் தட்டிக் கேட்க இவர்களுக்குத் திராணி உண்டா? இருப்பவர்கள் பலர் ம.இ.கா வினர். பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிக்களுக்கான 2000 ஏக்கர் நிலத்தை  தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டனர். மலாக்கா மாநிலத்தில் கல்வி அதிகாரியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சீனப் பெண்மணி பதவி வகிக்கிறார்! 

இவைகளையெல்லாம் கேட்க முடியவில்லையென்றால் இன்னொரு இந்திய இயக்கம் தேவை தானா என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.  தெலுங்கர்களோ,  மலயாளிகளோ அதில் அக்கறை காட்டமாட்டார்கள்! அவர்களுக்கு அதில் அக்கறை இல்லை!  தமிழர்கள் தானே அதில் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது. 

தமிழர்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏணியாகத் தான் பயன்படுத்தப் படுகிறார்கள்!

மலேசிய இந்தியர்கள் இயக்கம் என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  நல்லது செய்தால் பாராட்டுவோம்! வாழ்த்துவோம்! நல்லது நடக்கவில்லையென்றால்  தாழ்த்துவோம்! எவனும் நமக்கு உதவப்போவதில்லை! நமது கையே நமக்கு உதவி!

No comments:

Post a Comment