Friday 25 September 2020

பேராசிரியர் சொல்வது சரியா?

 வட மலேசியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சிவப்பிரகாசம் இராஜேந்திரன் கூறிய ஒரு கருத்து இப்போது நமது பத்திரிக்கைகளில் விவாத மேடை ஆகிவிட்டது!

தாய் மொழிப்பள்ளிகளினால் ஒருமித்த கருத்துடைய மலேசியர்களை உருவாக்க முடியாது என்கிற அவர் கருத்தை நாம் ஆதரிக்கவில்லை.  அது நமது கருத்துக்கு விரோதமான கருத்தை அவர் கூறியிருக்கிறார். 

அது பற்றி பேசும் முன் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.  அவர் சார்ந்த சமூகம் என்றோ தமிழை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டது. 

ஆமாம் அவர்களைப் பொறுத்தவரை தமிழ் என்பது தமிழ் நாட்டிலிருந்து வந்த தோட்டக் கூலிகளால்  பேசப்படுகின்ற ஒரு மொழி.  கூலிகளால் பேசப்படுகின்ற ஒரு மொழியை உயர்ந்த நிலையில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு அது ஏற்ற மொழி அல்ல என்பதாக அவர்கள் தமிழை ஒதுக்கி விட்டனர். 

ஓர் உண்மையை அவர்கள் மறந்துவிட்டனர்.  அவர்கள் இங்கு கூலிகளாக இல்லாவிட்டாலும் அங்கே அவர்கள் கூலிகளாக இருந்தவர்கள் தான்!  இல்லாவிட்டால் இங்கே இந்த நாட்டில் அவர்களுக்கு என்ன வேலை என்கிற கேள்வி நியாயம் தானே!

ஆரம்ப காலங்களில் அவர்கள் தமிழை வளர்த்தனர்.  தமிழ்ப்பள்ளிகளை நடத்தினர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழப் படித்தனர். அப்படிப் படித்தவர்களில் மலேசிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்தகிருஷ்ணன், பூப்பந்து விளையாட்டு வீரர் பஞ்ச் குணாளன் இப்படி இன்னும் பலர்.

ஆனால் இவர்கள் பள்ளிகளில் கூலிக்காரத் தமிழர்களின் பிள்ளைகளும் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர்கள் விழித்துக் கொண்டனர்.  அது அவர்களுக்குத் தனமானப் பிரச்சனையாகி விட்டது. 

அத்தோடு அவர்களின் தமிழ் மீதான நாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது! அத்தோடு வெறுப்பும் வந்தது! அத்தோடு புறந்தள்ளும் போக்கும் வந்தது! அதன் பிறகு அவர்கள் தமிழ் மொழியைத் முற்றிலுமாக துறந்து விட்டனர்!

இந்த நிலையில், அந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருவரை, தாய் மொழிப்பள்ளிகளைப் பற்றி பேசச் சொன்னால் என்ன பேசுவார்?

ஆங்கிலத்தையே தாய் மொழியாக ஏற்றுக் கொண்டு விட்ட ஒரு சமூகத்தினரின் கருத்தை அவர் பிரதிபலிக்கிறார், அவ்வளவு தான்! அது தமிழர்களின் கருத்தல்ல!

ஒன்றை அவர் மறந்து விட்டார். என்ன தான் ஊர்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்து ஆக முடியாது என்பதை அவர் மறந்து விட்டார்! தமிழனை நம்பாமல் அவர் பேர் போட முடியாது! அது நினைவில் இருந்தால் போதும்!

No comments:

Post a Comment