Wednesday 1 July 2020

முதல் முறையாக....!

நல்ல செய்தி தான்!

முதல் முறையாக நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்திருப்பது மிக மிக நல்ல செய்தி. 

இந்தச் செய்தியைத் தான் ஒவ்வொரு மலேசியனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்தி. இதை விட மகிழ்ச்சி வேறு என்ன உண்டு!

இதே நற்செய்தியை இன்னும் 28 நாள்களுக்குத் தொடர்ந்தால் அதன் பின்னர் நம் நாடு கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்படும். 

அது வரையில் ஒவ்வொரு மலேசியனும் சுகாதார அமைச்சு நமக்கு விதித்துள்ள கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

காரணம் கொரோனா அவ்வளவு சீக்கிரத்தில் முற்றிலுமாக ஒழிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.  அவ்வப்போது தொற்று தொடரத்தான் செய்யும். 

சரியான மருந்து வகைகளைக் கண்டுப்பிடிக்கும் வரை அந்தத் தொற்று நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கும். இங்கு மட்டும் அல்ல உலகளவில் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

பள்ளிகள் எல்லாம் ஏறக்குறைய திறக்கப்பட்டு விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.இந்த மாதத்தில் முழுமையாக பிள்ளைகள் பள்ளி செல்வார்கள்  என நம்பலாம்.  கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு விட்டன.

மீண்டும் நாடு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். 

இந்த "முதல் முறையாக"  என்பது "கடைசி முறையாக" வும் இருக்க இறைவனை இறைஞ்சுவோம்!

No comments:

Post a Comment