Tuesday 21 July 2020

அப்படியா! ரொம்ப சந்தோஷம்!

 நெகிரி மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் எந்த ஒரு கொரோனா தொற்று நோயும் புதிதாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் கூறியுள்ளார்.

அதாவது மருத்துவமனையில் இப்போது யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.  புதிய இறப்புக்கள் இல்லை. புதிய திறப்புக்களும் இல்லை!

நீண்ட நாட்களாக சிவப்பு மண்டலமாக இருந்த ரெம்பாவ் வட்டாரம் கூட பச்சை மண்டலத்திற்குள் வந்துவிட்டது!

அப்படியென்றால் நமக்கு மகிழ்ச்சி தானே!

ஆனாலும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. பிரதமர் "நீங்க ஒழுங்கா இல்லேன்னா மீண்டும் ஊரடங்கு வரும்!" என்கிறார்!   "மீண்டும் முகக்கவசத்தை அணியுங்கள்! அது முக்கியம்!" என்கிறார்!

கொஞ்சம் யோசித்தால் ஒன்று புரியும்.  "என்றும் துன்பம் இல்லை சோகம் இல்லை!"  என்று பட்டுக்கோட்டையாரின் பாடலை பாடிக் கொண்டிருக்க வழி இல்லை!

நெகிரி செம்பிலானில் இரண்டு வாரங்களாக கொரொனா 19 இல்லையென்றாலும் மாநிலத்தில் எல்லாக் கதவுகளும் இழுத்து மூடப்பட்டு விட்டன என்று சந்தோஷப்பட வழியில்லை! எல்லைகள் எல்லாம் வருக! வருக! என வரவேற்றுக் கொண்டு தான் இருக்கின்றன!

இங்கிருந்து வெளி மாநிலங்களுக்குப் போவதும் வெளி மாநிலங்கலிலிருந்து இங்கு வருவதற்கும் எந்தத் தடையுமில்லை! தடையுத்தரவும் இல்லை! அப்படிப் போடவும் வழியில்லை!

இந்த நிலையில் கொரோனா வரவே வராது என்று எந்த உத்தரவாதமும் இல்லை! எந்த நேரத்திலும் வரலாம்!  எந்த நேரத்திலும் போகலாம்! 

அதனால் நாம் கட்டுப்பாடோடு தான் இருக்க வேண்டும். அரசாங்கம் சொல்லுகின்ற கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும்.

இப்போதைக்கு பிரதமர் சொல்லுவது போல முகக்கவசம் அணிவது அவசியம்.  சிவப்பு மண்டலங்களில் உள்ளவர்கள் இன்னும் அதிகமாக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்!

இப்போது, இன்றைய நிலையில், நெகிரி செம்பிலானில் உள்ள நிலவரம் நமக்கு மக்ழ்ச்சி தான்! அது தொடர வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை!

சந்தோஷம் நீடிக்க வேண்டும்!

No comments:

Post a Comment