Sunday 5 July 2020

டாக்டர் மகாதிரை இனி நாம் நம்பலமா?

முன்னாள் பிரதமர் மகாதிரை மக்கள் இன்னும் நம்புகிறார்களா?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரின் செல்வாக்கு என்பது இன்னும் ஓரிரு சிறிய அளவிலான வயதானவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

அவருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது தகுதி இல்லாதவர்களை எல்லால் தூக்கிவிட்டவர்களில் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுடைய ஆதரவு இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை இந்திய சமுதாயம் எந்தப் பயனையும் பெறவில்லை. அவருக்கு ம.இ.கா. தலைவர்கள் உடந்தையாக இருந்து தங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டார்கள்!

14-வது பொதுத் தேர்தல் நடந்த போது, முன்னாள் பிரதமர் என்னும் வகையில்,  டாக்டர் மகாதிருக்குப் பெரும் அளவில் அவருக்கு ஆதரவுக் கொடுத்தார்கள் என்பது உண்மை தான். காரணம் நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டில் ஊழல் என்பது கட்டுக்கு அடங்கமால் போனது அனைத்து மக்களும், ஒவ்வொரு மலேசியனும். அறிந்த உண்மை!

அந்த நேரத்தில் தான் டாக்டர் மகாதிரின் ஆதரவு எதிர்கட்சியினருக்குத் தேவையாக இருந்தது. அவர் வயதானவர், ஆற்றலுள்ளவர், பேச்சுத் திறன் மிக்கவர் என்கிற வகையில் தான் அவரை எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். அவர் திறமைசாலி என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் பதவிக்கு வந்த பின்னர், மீண்டும் பிரதமராக வந்த பின்னர், அவர் தனது பழைய பாணி அரசியலையே பின்பற்றத் தொடங்கினார் என்பது தான் சோகம்.  அதனால் யாருக்கும் பயன் இல்லாமல் போய்விட்டது. அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்த எதனையும் அவர்களால் சாதிக்க இயலவில்லை! 

கடைசியில் அனைத்தையும் பாழாக்கிவிட்டர் டாகடர் மகாதிர். இப்போது இதனை வயது கோளாறு என்று சொல்லலாமா? அது மட்டும் அல்ல. இனி அவருக்கு அரசியல் இலாயக்கில்லை என்கிற நிலைமையும் ஏற்பட்டு விட்டது!  இனி அவரை நம்புகிற மாதிரி ஒன்றும் இல்லை. 

இப்போது மக்களிடையே ஏதோ கோமாளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்! இனி அவர் அரசியல் கோமாளி என்று தாரளாமாகச் சொல்லலாம்!

டாக்டர் மகாதிர் அவர்களுக்கு இனி அரசியலில் எதிர்காலமில்லை. கிடைத்த வாய்ப்பையும் இழந்து விட்டார். 

இனி மலேசிய அரசியலில் அவரால் பேச முடிந்ததெல்லாம் இனப் பிரச்சனை மட்டும் தான்.  சீனர்கள் பணக்காரர்கள் என்று சொல்லலாம். அதைத் தவிர பேச அவருக்கு ஒன்றுமில்லை!

டாக்டர் மகாதிருக்கு வயதாகி விட்டது. நாம் நம்பும்படியாக அவர் என்றுமே நடந்து கொண்டதும் இல்ல! இனி நம்ப அவரிடம் ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment