Monday 27 July 2020

இதை நம்பலாம்!

நாம் மீண்டும் சுகுபவித்ரா தம்பதியினரைப் பற்றித்   தான் பேச வேண்டியுள்ளது!

காரணம் 'ஆம்! இல்லை!'  என்கிற பாணியிலேயே பல செய்திகள் வருவதால் எதனையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை! 

கடைசியாகக் கிடைத்த செய்தி நம்பகரமான செய்தியாக இருக்கும் என நம்புகிறேன்.

அத் தம்பதியினர் தொடர்ந்து காணொளியின் மூலம் அவர்களது சமையற்கலை நிகழ்ச்சியினைத் தொடர வேண்டும் என்பதே என்னைப் போன்றோர் விரும்புகின்றனர். அது மக்களின் விருப்பமும் கூட! அதில் சந்தேகம் இல்லை!

பொதுவாக நான் எந்த சமையற்கலை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில்லை. அது எனது பாதையல்ல!

ஆனால் ஒரு தமிழ்க் குடும்பத்தின் முன்னேற்றம் என்பது நமது தமிழர்களின் முன்னேற்றம் என்கிற அசையாத நம்பிக்கை உள்ளவன் நான்.  அவர்களது பொருளாதார வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி. 

ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் யாரையும் நம்பாமல் தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ளுவதில் அக்கறைக் காட்டினால் போதும்!  நமது சமுதாயம் பொருளாதார ரீதியில் தலை நிமிர்ந்து விடும்!

அந்த வகையில் சுகுபவித்ரா தம்பதியினரை நான் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்! அவர்களின் வளர்ச்சி அசாதாரண வளர்ச்சி!

அது தொடர வேண்டும் என்பதே எனது அவா. அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெற வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை!

அவர்களின் வளர்ச்சி என்பது அவர்களது குடும்பத்தின் வளர்ச்சி. அவர்களது பிள்ளைகளின் வளர்ச்சி. அவர்களது உறவுகளின் வளர்ச்சி. அவர்களது உற்றாரின் வளர்ச்சி.

ஒரு குடும்பம் முன்னேற்றம் அடையும் போது அதனைக் கெடுக்க நாலு குடிகார நாதாரிகள் குறுக்கிடத் தான் செய்வார்கள்! அவர்களை ஒதுக்கிவிட்டு நமது முன்னேற்றத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும். 

இந்த சமையற்கலை என்பது ஒரு கூட்டு முயற்சி. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள்.  இதனைத் தனித்து ஓர் ஆளாக செயல்பட முடியாது. 

அதனால் கண்வன் மனைவி இருவரும் சேர்ந்து இக்கூட்டு முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

குரைக்கின்ற நாயகள் குரைக்கட்டும்! 

உங்கள் நலனுக்காக இலட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுங்கள்!

No comments:

Post a Comment