Tuesday 14 July 2020

முகைதீன் யாசின் சரித்திரம் படைத்துவிட்டார்!


நாட்டின் முன்னாள் பிரதமர், டாக்டர் மகாதிர் உலக சரித்திரத்தில்  யாரும் செய்ய முடியாததை செய்து காட்டியவர்.

எந்த ஒரு நாட்டிலும் பிரதமர் பதவியிலிருந்து விலகியப் பின்னர், இரண்டாம் முறையாக 22 ஆண்டு காலம் தான் சார்ந்திருந்த கட்சியையே எதிர்த்து, போட்டிப் போட்டு மீண்டும் பிரதமராக வந்தவர் யாருமில்லை. உலக சரித்திரத்தில் அப்படி யாரும் இல்லை. அது தான் டாக்டர் மகாதிரின் சிறப்பு.  அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது தான் உண்மை!

இன்றைய பிரதமர் முகைதீன் யாசின் பிரதமராக கொல்லைப்புற வழியாகப் பதவிக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். மாற்றங்கள் என்றால்?  தனது எதிரிகள் யார், யார் தன்னை எந்த நேரத்திலும் குறி வைப்பவர்கள் என்பதையெல்லாம் கணித்து அவர்களை எல்லாம் களை எடுத்தார்!  

இவைகள் எல்லாம் இது போன்ற கொல்லைப்புற ஆட்சியில் நடக்கின்றவை தாம்! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! ஆனால் இவரது  களையெடுப்பில் அம்னோ கட்சி அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது! அம்னோ தான் பல களையெடுப்புக்களுக்குக் காரணமாக இருப்பவர்கள்; இருந்தவர்கள்! அம்னோவுக்கு அந்த அதிகாரம் கொடுத்திராவிட்டால் இந்நேரம் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும்!

இப்போதைய பிரதமர் முகைதீன் காலத்தில் எத்தனையோ களையெடுப்புக்கள் நடந்தாலும் முக்கியாமான இரண்டைக் குறிப்பிட வேண்டும்.  ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் இலத்திஃபா கோயா தான் முதல் பலி. அவரைக் கண்டால் அம்னோவுக்கு அடிவயிற்றில் புளி கரைத்தது போல! அது உடனடியாக நடந்தது! 

அடுத்தது முகைதீனின் முக்கிய பலி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார்.  டான்ஸ்ரீ முகம்மது அரிஃப். இவரைப்பற்றி நாம் சந்தேகப்பட ஒன்றுமில்லை.  நேர்மையான மனிதர் என்று பெயர் எடுத்தவர். அம்னோவோ அல்லது பிரதமரோ நேர்மை என்றாலோ எட்டி நிற்பவர்கள்! அதனால் இவரையும் துணை சபாநாயகரையும் கழட்டி விட்டார்கள்!

இது பற்றி முன்னாள் சபாநாயகர் முகம்மது அரிஃப் பேசும் போது இப்படி ஒரு சம்பவம் 800 ஆண்டுகளாக எங்கேயும் நடந்ததில்லை என்கிறார்! அவருக்குத் தெரிந்த உண்மையை அவர் சொல்லுகிறார்! யாராலும் இதனை மறுக்க முடியாது!

இந்த வகையில் பார்க்கும் போது நஜிப்பைப் போல இன்றைய பிரதமரும் சரித்திரம் படைத்துவிட்டார்! முன்னாள் பிரதமர் ஊழலக்கு எப்படிப் பெயர் பெற்றாரோ அதே போல 800 ஆண்டுகாலம் நடக்காத ஒரு சம்பவத்தின் மூலம் நடக்க வைத்த பெருமையை அவர் பெறுகிறார்!

இன்னும் என்ன என்ன பெருமைகளை அவர் பெறப் போகிறாரோ என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன!

இன்னும் பல சரித்திர நிகழ்வுகளை எதிர்ப்பார்க்கலாம்!

No comments:

Post a Comment