Wednesday 22 July 2020

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்!

இந்த பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தான்!

அவர் அரசியலில் புகுந்த போது யார் யாரையோ, எவர் எவரையோ குற்றம் சொன்னார்.  அப்படிக் குற்றம் சொன்னாரே தவிர மற்றபடி யாரும் அவரது குற்றச்சாட்டைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை! 

சுதந்திரத் தந்தை என்று போற்றப்படும் ,  முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான். சிங்கப்பூர் தலைவர்கள் - இவர்களைப் பற்றியெல்லாம் ஏராளமானக் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக பல குற்றசாட்டுகளை வைத்தவர் இவர். 

ஆனால் என்ன ஆயிற்று? துங்கு நல்ல பெயரோடு தான் போய்ச் சேர்ந்தார். சிங்கப்பூர் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது! 

இவரது ஆட்சியில் என்ன செய்தார்? பல கொள்ளைக்காரர்களை உருவாக்கினார் முன்னாள் பிரதமர் நஜிப் உட்பட!  இன்று நஜிப் என்ன சொல்லுகிறார்? டாகடர் மகாதிரின் பிள்ளைகள் எப்படிக் கோடிசுவரர்கள் ஆனார்கள் என்று கேளவி கேட்கிறார்!

டாக்டர் மகாதிரின் சாதனை என்பது கொள்ளைக்காரர்களை உருவாக்கியது தான். அது மட்டும் அல்லாமல்அன்று முதல் இன்று வரை தன்னோடு பணிபுரிந்தவர்களை யாரையும் நல்லவர் என்று இதுவரை அவர் சொன்னதில்லை!

எப்போது மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்ல ஆரம்பித்தாரோ  அன்றிலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது! அந்த குற்றச்சாட்டை இன்னும் அவர் நிறுத்தவில்லை!

அவருக்குப் பின் பிரதமராக வந்தவர்கள் எல்லாம் அவரால் உருவாக்கப்பட்டவர்கள்.  ஆனால் அவர்கள் யாரையும் நல்லவர்கள் என்று இவர் சொன்னதில்லை! அப்படியென்றால் அவர்கள் சரியானபடி வார்த்து எடுக்கப்படவில்லை என்று தானே சொல்ல வேண்டியுள்ளது! அது யார் குற்றம்?

அப்படி என்ன தான் இவர் சொல்ல வருகிறார்? தன்னைத் தவிர மற்றவர்கள் ஆட்சி செய்ய இயலாது என்று சொல்லுகிறார்!

இதைத்தான் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை  சொல்லி வருகிறார்! அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஷாஃபியைக் கூட நல்லவர் என்று லிம் குவான் எங் தான் பரிந்துரைத்திருக்கிறார்! இவர் அல்ல!

இந்த 95-வது வயதிலும் இவர் இப்படி நடந்து கொள்ளுவது நமக்கே சங்கடத்தைத் தருகிறது!

சுடுகாடு வரை இப்படித்தான் இருப்பாரோ!

No comments:

Post a Comment