Thursday 30 July 2020

அரசியல்வாதிகளே! உஷார்!

அரசியல்வாதிகளே! நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,  ஊழல் செய்வதற்குத் தான் அரசியலுக்கு வருகிறீர்கள் என்றால், இப்போது நடந்து முடிந்த நீதிமன்ற வழக்கின்படி முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு என்ன ஆயிற்று என்பதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்!

குற்றம் செய்தவன் தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை! யாரும் தப்பிக்க முடியாது! எந்தக் கொம்பனாலும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது!

ஆமாம், இது வரை தப்பித்தவன்?  யாரும் தப்பிக்க முடியாது என்பது தான் இறைவனின் நியதி!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஊழல் செய்து குடும்பத்திற்குச் சொத்து சேர்த்து வைக்காதீர்கள். அது எந்த வகையிலும் உங்கள் குடும்பத்திற்கு நல்லதைக் கொண்டு வராது!

சாபங்கள் ஏழு தலைமுறை தொடரும் என்பார்கள்.  மக்களின் பணம், இரத்தம் சிந்தி சம்பாதித்தப் பணம்,  நெஞ்சொடிய உழைத்துச் சம்பாதித்த பணம் இப்படித்தான் பொது மக்களின் பணம் ஊழலாக அரசியல்வாதிகளுக்குப் போய்ச் சேருகிறது.

இப்படி ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணம் நல்லதைச் செய்யாது என்பது மட்டும் அல்ல அந்தக் குடும்பத்திற்குச் சாபத்தைக் கொண்டு வரத் தயங்காது என்பதை மட்டும் நம்பலாம்!

ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற வன்முறைகள், கலகங்கள், விபத்துகள், அமைதியின்மை எதுவாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் ஒரே காரணம் ஊழல்! ஊழல்! தான்!

ஏதோ ஒன்று வரத்தான் செய்யும்! அது நமக்குத் தெரியாவிட்டாலும் அது வந்து தான் ஆகும்!

எனக்குத் தெரிந்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்! ஒருவன் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான்! ஒருவன் ஒரு நோயாளியாக இளம் வயதிலேயே இறந்து போனான்! ஒருவன் தனது ஒரே ஒரு மகனின் வைத்திய செலவுக்காக எல்லாச் சொத்துக்களையும் இழந்தும் மகனைக் காப்பாற்ற முடியவில்லை! ஒருவன் வெறித்தனமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்!

 இப்போது அரசியல்வாதிகளாக வருபவர்கள் அனைவரும் படித்தவர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறார்கள். அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள். 

ஊழல் செய்து தான் பிழைப்பை நடத்த வேண்டும் என்றால் அப்படி ஒரு பிழைப்பு வேண்டாம்!

No comments:

Post a Comment