Saturday 4 July 2020

பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்?


இன்றைய பிரதமர் முகைதீன் யாசின்,  கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குளறுபடியில் பிரதமராக வந்தவர்!

அவர் பிரதமராக வருவார் என்று யாரும் நினைத்துப் பார்த்ததுக் கூட இல்லை! எல்லாக் காலங்களிலும் அவர்  - பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி - ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தவர்.  அப்போதெல்லாம் சொல்லப்பட்ட காரணங்கள அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராது என்பது தான்!  ஏதோ உள் நோக்கம் இருந்திருக்கலாம்.  அவர் ஓரு பட்டதாரி. அது எப்படி ஆங்கிலம் வராமல் போகும்? 

ஆனாலும் அவர் பிரதமர் ஆனார். அவர் அடுத்த தேர்தல் வரை பிரதமராகத் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் நன்றாகவே இருக்கின்றது. எதிர்ப்பவர்கள் இப்போதைக்கு யாருமில்லை!

அது சரி. அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வரும்போது அவர் நிலை என்னவாகும்? 

இப்போதைக்கு அவரைப் பிரதமர் வேட்பாளாராக அம்னோவும், பாஸ் கட்சியும் ஆதரவு தெரிவிக்கின்றன. 

இதனைக் கூட ஒரு தற்காலிக ஏற்பாடு என்று சொல்லலாம்.  அது ஒரு சரியான ஏற்பாடு என்று சொல்லுவதற்கில்லை. அவரைப் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி அம்னோவும் பாஸ் கட்சியும் கூடி கும்மியடிப்பார்களே தவிர, மற்றபடி இந்த ஏற்பாடு எந்த நன்மையும் முகைதீனுக்குக் கொண்டு வரப் போவதில்லை! 

பாஸ் கட்சி அமைச்சரைவையில் தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்களே தவிர  அவர்கள் கீழே இறங்கி வர மாட்டார்கள்! மத்திய ஆட்சியில் தங்களது பங்கு அதிகமாகவே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோளாகவே இருக்கும்!

அம்னோ கட்சியினரோ பிரதமர் பதவிக்குத் தான் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பார்களே தவிர அதனை விட்டுக் கொடுப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்!  தனது நீண்ட பாரம்பரியத்தை அம்னோவால் விட்டுக் கொடுக்க முடியாது.  மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதை அவர்கள் அவமானமாகக் கருதக் கூடியவர்கள்!

இப்போது, உடனடியாக,  ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அம்னோவின் திட்டம்.   அதற்காக ஒரு தற்காலிக ஏற்பாடாக "அதை ஏற்றுக் கொள்ளுகிறோம்! இதை ஏற்றுக் கொள்ளுகிறோம்!" என்பதையெல்லாம் அவர்கள் பேசி வருகிறார்கள். 

ஆட்சி கலைந்த பின்னர், அடுத்த தேர்தல் வரும் என்று உறுதிப்படுத்திவிட்டால், இந்தக் கூட்டம் முற்றிலுமாக தன்னை மாற்றிக்  கொள்ளும்!  அதில் சந்தேகமில்லை!

அடுத்த பொதுத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளாராக இருக்கக் கூடும்?  ஒரு பக்கம் அன்வார் இப்ராகிம் அதில் எந்த மாற்றமும் இல்லை.  ஆனால் ஆளுங்கட்சி சார்பில்? 

ஆளுங்கட்சி அரசியலில் இன்னும் தெளிவில்லை! இன்னும் குழப்பம் நீடிக்கிறது!

No comments:

Post a Comment