Sunday 12 July 2020

மீண்டுமா,,,,,,,,,,?


மீண்டும் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

மலேசியர்கள் இந்த அளவுக்குக் கொடூரமானவர்களா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதற்கான தண்டனையும் கொடுத்தாகிவிட்டது.

பூனை, நாய்  இவைகளெல்லாம் நம்மோடு எல்லாக் காலங்களிலும் சேர்ந்து வாழுகின்ற மிருகங்கள்.  சில சமயங்களில் அவைகள் செய்கின்ற சேட்டைகள் எல்லை மீறுவது உண்டு என்பது உண்மை தான். 

அதற்காக  மூன்று பூனைகளையும் மூன்று சலவை இயந்திரங்களில் போட்டு அதனைக் கொலை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

இது நடந்தது கெப்போங், தாமான் டேசா அமான் பூரியில் உள்ள ஓர் சலவை நிலையத்தில். 

ஆனால் இப்படிக் கொலை செய்த அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வரும் போது யார் என்ன செய்ய முடியும்?  இவர் ஆபத்தானவர் என்பது தெரிகிறது. காரணம் இவர் கையில் எது கிடைத்தாலும் இப்படி அவர் தொடர்ந்து செய்யக் கூடும் அல்லவா!

அதனால் அதிகாரிகள் அந்த இளைஞர் வெளியே சுற்றிக் கொண்டு இரூப்பதை விட தேவையான சிகிச்சையைக் கொடுத்து அவர் நல்ல மன நிலைக்கு வர ஆவன செய்ய வேண்டும்.  

இது போன்ற நிகழ்ச்சிகள் தொடராமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் உணர வேண்டும்.

காரணம் இன்று பூனை என்றால் நாளை நாயாக இருக்கலாம் அல்லது குழந்தையாகக் கூட இருக்கலாம்.  யார் கண்டார்?

No comments:

Post a Comment