ம.இ.கா. தலைவர் - பிரதமர்
ம.இ.கா. வின் 75-ம் தேசியப் பொதுப் பேரவையில் தலைமை உரையாற்றிய ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பிரதமருக்கு ஓரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்தியர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மித்ரா அமைப்பு மீண்டும் பிரதர் துறைக்கே மாற்றப்பட வேண்டும் ஏன்னும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
இந்த கோரிக்கையை விடுப்பதன் மூலம் அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. அந்த அமைப்பு பிரதமர் துறையின் கீழ் இருந்தாலும் சரி அல்லது ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இருந்தாலும் சரி அதில் என்ன வித்தியாசம் என்பது நமக்குப் புரியவில்லை.
மித்ரா அமைப்போ அல்லது அதற்கு முன்னர் செடிக் அமைப்போ பெரும்பாலும் பிரதமர் துறையின் கீழ் தான் இருந்து வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அது ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது. இதற்கிடையே பதினெட்டு மாத பக்காத்தான் ஆட்சியில் பிரதமர் துறையில் ஓர் அமைச்சரின் கீழ் செயல்பட்டு வந்திருக்கிறது.
ஆக மொத்தமாகப் பார்க்கும் போது இந்த மித்ரா அமைப்பு முழுமையாக ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஒரு சிறிய இடைவெளியில் தான் அது கைமாறியிருக்கிறது! அதுவும் ஒரு பதினெட்டு மாதங்கள்!
பிரதமர் துறையோ அல்லது ஒற்றுமைத்துறையோ மித்ராவின் உள்ளும் புறமும் அறிந்திருப்பவர்கள் ம.இ.கா.வினர்! இப்போது தான் நாங்கள் ஒன்றுமே அறியாதவர்கள் என்பது போல தலைவர் பேசுகின்றார்! இப்போது அவரே ஒன்றை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதாவது மித்ராவின் பயன்படுத்தாத நிதியை சுமார் 40 கோடி ரிங்கிட்டை மீண்டும் கருவுலத்திற்கே திரும்ப அனுப்பிவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்!
இந்திய சமூகம் பொருளாதார சிக்கல்களினால் எவ்வளவோ பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அது கல்வியாக இருக்கலாம். சிறு, குறு,பெரு வியாபாரிகளாக இருக்கலாம். திருப்பி அனுப்பிவிட்டதன் மூலம் ம.இ.கா.வினர் என்ன தான் சாதித்தார்கள்? இதன்மூலம் அவர்கள் மக்களுக்கு என்னதான் சொல்ல வருகிறார்கள்? அல்லது இந்தியர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்?
மித்ராவை பிரதமர் துறைக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்பது நமக்குத் தெரியவில்லை. செடிக்கின் ஆரம்ப காலக்கட்டத்திலும் புகார்கள் எழவே செய்தன! அப்போதும் ம.இ.கா. வின் பெயர் தான் அடிபட்டது. அப்போதும் அவர்கள் தான் நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன!
எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம். ம.இ.கா. வினர், ம.இ.கா. தலைவர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்கிற நினைப்பு இருக்கும்வரை செடிக் அல்லது மித்ரா தோல்வியில் தான் போய் முடியும்! இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கிகள் உதவப் போவதில்லை. அரசாங்கம் உதவினாலும் அதற்கு ம.இ.கா.வே தடை போடும்! முட்டுக்கட்டையாக இருக்கும்!
ஆக நமக்கு நாமே எஜமானன்! அவ்வளவு தான்!
No comments:
Post a Comment