ஒவ்வொரு ஆண்டும் நாம் பல சிறப்புக்களை எதிர்பார்ப்பதுண்டு. அதே போலத்தான் 2021 - ம் ஆண்டும்.
நமது நாட்டை புரட்டி போட்ட ஆண்டு என்றால் அது 2021 - ம் ஆண்டு தான். நமது நாடு மட்டும் அல்ல. உலக நாடுகள் அனைத்தும் பல சிரமங்களைச் சந்தித்தன.
கோரோனாவை ஒழித்துக் கட்டுவதில் எல்லா நாடுகளும் தீவிரம் காட்டின; காட்டுகின்றன. ஆனால் கோரோனா தான் மக்களை ஒழித்துக்கட்டுவதில் தீவிரம் காட்டுகின்றது!
இது ஏன் சிறப்பான ஆண்டு என்று பார்த்தால் இந்த ஆண்டு மக்களுக்கு அதுவும் குறிப்பாக எப்போதும் ஆர்ப்பாட்ட வாழ்க்கையில் அமிழ்ந்திருக்கும் நமது தமிழ் மக்களுக்குச் சரியான பாடமாக அமைந்துவிட்டது.
வேலை இல்லை என்பதே நமக்குப் பெரிய அடி.யாக விழுந்தது! வேலை இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை நமது மக்கள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்; உணர்ந்திருக்க வேண்டும்.
இந்த வேலை இல்லை என்கிற நிலை வந்த போது ஒரு சிலர் பல முயற்சிகளை எடுத்து புதிய பாதையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
நமது பெண்கள் பலர் வியாபாரத் துறையில் தங்களது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சி. எவ்வளவோ முயற்சிகள் நாம் எடுத்தாலும் அசைந்து கொடுக்காத நம் மக்கள் இப்போது "வேறு வழியிலை!" என்கிற நிலை வரும் போது வியாபாரத்தில் இறங்கிவிட்டார்கள்!
இந்த ஒரு முயற்சியே போதும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். நம் மக்களுக்கு வியாபாரமே கைகொடுக்கும் என்பதைப் போகப் போக புரிந்து கொள்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டு தமிழர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டு தான்.
No comments:
Post a Comment