Saturday 7 August 2021

ஏன் தமிழக மீனவர்கள்?

 ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கப் போகும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.  அவர்கள் வலைகள்  சேதப்படுத்தப்படுகின்றன.  அவர்களின் படகுகள் அபகரிக்கப்படுகின்றன. மீனவர்கள் சுடப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர். 

இப்படித்தான் தமிழக மீனவர்கள் பலகாலமாக இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுகின்றனர்.

ஒரு கேள்வி நமக்குண்டு. இந்திய மீனவர்கள் என்கின்ற போது அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஒரு வேளை அவர்கள் சிறைப் பிடிக்கபடலாம். அத்து மீறினார்கள் என்றால் சிறைப்பிடிப்பது மட்டும் தான் பெரும்பாலும் அவர்களுக்கான தண்டனை. சுடப்பட்டாலோ, கொலை செய்யப்பட்டாலோ இந்திய அரசாங்கம் அந்த நாட்டின் மீது கடுமையாகக் குரல் கொடுக்கும்.

ஆனால் தமிழக மீனவர்கள் என்றால் இந்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் குறிப்பாக அவர்கள் தமிழக மீனவர்கள் என்கிற பட்டியலில் வருகிறார்கள். அப்படியென்றால் அவர்களை இந்திய அரசாங்கம் இந்திய மினவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக அரசாங்கம் அவர்களைத் தமிழக மீனவர்களாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு  எந்தப் பொறுப்பையும்  ஏற்றுக் கொள்ளவதில்லை!

இதற்கான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது? எல்லா மாநில மீனவர்களின் எல்லை மீறல்  பிரச்சனைகளை  இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. அவர்கள் இந்திய மீனவர்கள். தமிழ் நாட்டில் மட்டும் அவர்கள் தமிழக மீனவர்கள். ஏன் இந்த தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மாற்றிக்கொள்ளக் கூடாது? இந்திய மீனவர்கள் என்றால்,  தாக்குதல்கள் நடக்கும் போது,  அதனை இந்திய அரசாங்கம் கண்டிக்கிறது. அது தானே தமிழக மீனவர்களுக்கு வேண்டும். இன்றைய நிலையில் பாவப்பட்ட தமிழக மீனவர்கள் மீது யாரும் எந்தப் பொறுப்பும் எடுத்துக் கொள்ளவில்லை.

இதில் வெறும் பெயர் மாற்றம் தானா என்பது நமக்குத் தெரியவில்லை. மாநில அரசாங்கத்திற்கு,  மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசு என்று எப்படி பெயர் மாற்றம் செய்ய  முடிந்ததோ அதே போல தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாதா? அப்படி செய்வதால் தமிழக மீனவர்கள் இந்திய அரசாங்கத்தின் கீழ் தானே வருகின்றனர், நல்லது தானே!

உண்மை நிலவரம் நமக்குத் தெரியவில்லை. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் என்பதால் தமிழ் நாட்டுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் இந்திய மீனவர்களாகவே இருக்கட்டும்! அப்படியாவது கொலைகளைத் தவிர்க்கலாம் அல்லவா!

No comments:

Post a Comment