Thursday 12 August 2021

ஏன் இந்த தடுமாற்றம்?

 காவல்துறை தடுமாறுகிறதா அல்லது சுகாதாரத்துறை தடுமாறுகிறதா?

கோவிட்-19 தொற்றினால் குழம்பிப் போயிருக்கும் பொது மக்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

காவல்துறையின் அறிவிப்பு நிச்சயமாக குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பொது மக்கள் உணவகங்களுக்குப் போவது இப்போது பெயரளவில் குறைந்திருக்கிறது. போகிற அளவுக்கு யாருக்கும் இப்போது துணிச்சலில்லை!  கோவிட்-19 எங்கிருந்து தாக்கும் என்கிற பயம் எல்லாருக்கும் உண்டு.

பொதுவாக  உணவகங்களுக்குச் செல்வபவர்கள்  அங்கு பணியாற்றுபவர்கள் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.  காரணம் உணவகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி முக்கியம் என்றே பொது மக்கள் கருதுகின்றனர்.

ஆனால் காவல்துறை உணவகப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி தேவை இல்லை என்று கூறியிருப்பது நமக்குச் சந்தேகத்தை எழுப்புகிறது. தேசிய பாதுகாப்பு மன்றமும்  இதனை உறுதிப்படுத்துகிறது.

நமக்குள்ள சந்தேகம் எல்லாம் ஒன்று தான். கோவிட்-19 மீண்டும் திட்டம் போட்டு பரப்பப்படுகிறதா?  காரணம் இப்போது நாமிருக்கும் சூழலில் சந்தேகம் என்பது தானாக வருகிறது.

இன்னொரு பக்கமும் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. உணவகத்தைத் திறக்கச் சொல்லி அனுமதி கொடுத்தாயிற்று. அதனை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் உணவகப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமில்லை என்று சொல்வதன் மூலம் மக்களைப் போக வேண்டாம் என்கிறார்களா?

அப்படி அரசாங்கம் நினைத்தால் உணவகங்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம்!

அரசாங்கம் சரியான முடிவை எடுக்க வேண்டும்.  மக்களைக் குழப்ப வேண்டாம்.

உணவகங்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் அனைத்துப் பணியாளர்களுக்கும்  தடுப்பூசி போடுங்கள். அதுவே உங்களுக்குப் பாதுகாப்பு. வாடிக்கையாளர்களும் அதைத்தான் விரும்பவர்.

அரசாங்கம் இன்று "இல்லை!" என்றால் நாளை "இல்லை அது பொய்!" என்பார்கள்! உங்கள் தொழிலுக்கு எது பாதுகாப்போ அதனைச் செய்யுங்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்பதே நமது அறிவுரை!

No comments:

Post a Comment